நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் | அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? | நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு | மீண்டும் சீரியலில் கம்பேக் கொடுத்த ஸ்ருதி சண்முகப்ரியா! | ஓடிடியிலும் சாதனை படைக்கும் 'ஹனுமான்' | 'ஆடு' படத்தின் மூன்றாம் பாகம் அறிவிப்பு | அனுபம் கெர் படத்திற்கு இசையமைக்கும் மரகதமணி | சூர்யாவின் 'புறநானூறு' தள்ளிப் போகிறதா? |
நடிகர் பிரபாஸ் அனுஷ்காவுடனும், நடிகர் ராணா த்ரிஷாவுடனும் இணைத்து கிசுகிசுக்கப்பட்டு வருகின்றனர். பிரபாஸ், ராணா இருவரில் யார் முதலில் திருமணம் செய்து கொள்வார் என்பது தெலுங்கு சினிமாவின் பெரிய கேள்வியாக இருந்து வருகிறது.
இந்நிலையில் நடிகர்கள் பிரபாஸ், ராணா, இயக்குனர்கள் ராஜமவுலி ஆகியோர் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டனர். அதில், த்ரிஷாவுடனான காதல் பற்றி ராணாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த ராணா, 'எனக்கு திரிஷா, பத்து வருடங்களுக்கு மேலாக தோழியாக இருந்தார். அவர் எனது நீண்ட நாள் தோழி. கொஞ்ச காலம் அவருடன் டேட்டிங்கில் இருந்தேன். பின் விலகிவிட்டேன்' என கூறினார்.
இடைமறித்து பேசிய பிரபாஸ், 'ராணாவையும் த்ரிஷாவையும் நான் சேர்த்து வைப்பேன' என்றார்.
அடுத்து அனுஷ்காவுடன் கிசுகிசுக்கப்படுவது பற்றி பிரபாஸிடம் கேட்கப்பட்டது. அதற்கு உடனே பதில் அளித்த பிரபாஸ், 'எனக்கும், அனுஷ்காவுக்கும் காதல் என்று வெளியாகும் தகவலில் உண்மை இல்லை' என்றார்.
அடுத்து, 'ராணா, பிரபாஸ் இருவரில் யார் திருமணம் முதலில் நடக்கும்?' என இயக்குநர் ராஜமவுலியிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்தவர், 'பிரபாசுக்கு முன்பே ராணா தான் திருமணம் செய்து கொள்வார்' என்று கூறினார்.