ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகர் பிரபாஸ் அனுஷ்காவுடனும், நடிகர் ராணா த்ரிஷாவுடனும் இணைத்து கிசுகிசுக்கப்பட்டு வருகின்றனர். பிரபாஸ், ராணா இருவரில் யார் முதலில் திருமணம் செய்து கொள்வார் என்பது தெலுங்கு சினிமாவின் பெரிய கேள்வியாக இருந்து வருகிறது.
இந்நிலையில் நடிகர்கள் பிரபாஸ், ராணா, இயக்குனர்கள் ராஜமவுலி ஆகியோர் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டனர். அதில், த்ரிஷாவுடனான காதல் பற்றி ராணாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த ராணா, 'எனக்கு திரிஷா, பத்து வருடங்களுக்கு மேலாக தோழியாக இருந்தார். அவர் எனது நீண்ட நாள் தோழி. கொஞ்ச காலம் அவருடன் டேட்டிங்கில் இருந்தேன். பின் விலகிவிட்டேன்' என கூறினார்.
இடைமறித்து பேசிய பிரபாஸ், 'ராணாவையும் த்ரிஷாவையும் நான் சேர்த்து வைப்பேன' என்றார்.
அடுத்து அனுஷ்காவுடன் கிசுகிசுக்கப்படுவது பற்றி பிரபாஸிடம் கேட்கப்பட்டது. அதற்கு உடனே பதில் அளித்த பிரபாஸ், 'எனக்கும், அனுஷ்காவுக்கும் காதல் என்று வெளியாகும் தகவலில் உண்மை இல்லை' என்றார்.
அடுத்து, 'ராணா, பிரபாஸ் இருவரில் யார் திருமணம் முதலில் நடக்கும்?' என இயக்குநர் ராஜமவுலியிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்தவர், 'பிரபாசுக்கு முன்பே ராணா தான் திருமணம் செய்து கொள்வார்' என்று கூறினார்.