ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
'ப பாண்டி' படத்திற்குப் பிறகு தனுஷ் இயக்க ஆரம்பித்த இரண்டாவது படம் டிராப் ஆகியுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 'மெர்சல்' படத்தைத் தயாரித்த தேனாண்டாள் பிலிம்ஸ், இந்தப் படத்தைத் தயாரிப்பதாக அறிவித்தது. தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா, சரத்குமார், எஸ்ஜே சூர்யா, ஸ்ரீகாந்த், அதிதி ராவ் உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.
சரித்திர காலப் படமாகவும், நிகழ் காலப் படமாகவும் கதையமைப்பு கொண்ட இந்தப் படம் மிகப் பெரும் பட்ஜெட்டில் உருவாக கடந்த செப்டம்பர் மாதம் ஆரம்பமானது. படப்பிடிப்பும் சில நாட்கள் நடைபெற்றது. தற்போது நிதிப் பிரச்சினை காரணமாக படத்தை நிறுத்த முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
'மெர்சல்' படம் அதிக வசூலைக் கொடுத்தாலும் தயாரித்த தேனாண்டாள் பிலிம்சுக்கு லாபமாக அமையவில்லை. சமீபத்தில் விஜய் நடித்த 'சர்கார்' படத்தையும் அவர்கள் வெளியிட்டனர். அதுவும் அவர்களுக்கு லாபமாக அமையவில்லையாம்.
தனுஷின் படத்தைத் தாங்கும் அளவிற்கு அவர்களால் செலவு செய்ய முடியாத சிக்கல் தற்போது உருவாகியுள்ளதால் படத்தை டிராப் செய்ய முடிவு செய்துவிட்டார்களாம். வேறு யாராவது அந்தப் படத்தைத் தயாரிக்க முன்வருவார்களா என்பது இனிமேல்தான் தெரிய வரும். இதனிடையே, தனுஷ் அடுத்து வெற்றி மாறன் இயக்கத்தில் 'அசுரன்' படத்தில் ஜனவரி மாதம் முதல் நடிக்க உள்ளாராம்.