ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பிரேமம் என்ற மலையாளப் படத்தின் மூலம் புகழ்பெற்ற சாய்பல்லவி, விஜய் இயக்கிய 'கரு' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். அந்தப்படத்தைத் தொடர்ந்து சாய் பல்லவி, தமிழில் நடித்துள்ள படம் 'மாரி-2'.
தனுஷ் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் 'ஆராத்து ஆனந்தி' என்ற ஆட்டோ ஓட்டுநராக நடித்துள்ளார் சாய் பல்லவி. இந்த படம் வருகிற 21-ஆம் தேதி வெளியாகிறது. இதே நாளில் சாய் பல்லவி தெலுங்கில் நடித்துள்ள படி படி லெச்சு மனசு (Padi Padi Leche Manasu') என்ற படமும் வெளியாகிறது. ஹனு ராகவபுடி இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஷர்வானந்த் கதாநாயகனாக நடித்துள்ளார்.
ஏற்கெனவே சாய் பல்லவி நடித்த 'பிடா' என்ற தெலுங்கு படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. இந்நிலையில்தான் சாய் பல்லவி நடித்த இரண்டு படங்கள் ஒரே நாளில் வெளியாக இருக்கிறது.
'மாரி-2' படத்தை தொடர்ந்து சாய் பல்லவி நடிப்பில் சூர்யாவின் 'NGK' வெளியாக இருக்கிறது. இந்த படங்கள் எல்லாம் வெற்றியடையும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் சாய்பல்லவியை தற்போது தேடிவரும் தயாரிப்பாளர்களிடம் பெரிய சம்பளம் கேட்கிறாராம்.