சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
கஜா புயலினால் பாதிக்கப்பட்ட டெல்டா பகுதி மக்களை சந்தித்து ஆறுதல் மற்றும் நிவாரணங்களை வழங்கிய நடிகரும், மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல்ஹாசன், மூன்றாம் கட்டமாக கொடைக்கானலில் பாதிப்படைந்த பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.
கொடைக்கானில், குருசரடி, பெருமாள் மலை, கோரன் கொம்பு, மங்களக்கொம்பு, குரங்கனிப்பாறை, கடைசிக்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாகனம் மூலமும், சில இடங்களில் நடந்து சென்றும் பார்வையிட்டு, அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். பல ஊர்களில் நிவாரணமும் வழங்கினார்.
செய்தியாளர்களிடம் பேசிய கமல், எங்கள் கொள்கையே சென்ட்ரிசம், மக்களுக்கு எது நல்லது, எது நியாயம் என்று படுகிறதோ அதை நோக்கி நாங்கள் பயணித்துக் கொண்டிருக்கின்றோம். அது மட்டும் தான் எங்களுடையே ஒரே கொள்கை. மக்களின் பிரச்சனைகளை மக்கள் நீதி மய்யம் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கும். மக்களின் பிரச்னைகள் மிக முக்கியமானதாக இருக்கிறது. கருணாநிதிக்கு மரியாதை செலுத்துவதற்கு எனக்கு இன்னும் நிறைய வாய்ப்புகள் கிடைக்கும் என்றார்.