ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
'ஆடுகளம்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆனவர் நடிகை டாப்சி. அவர், ஹிந்தி படங்களில் நடிக்கச் சென்றது முதல், தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்க முன்வரவில்லை. இந்நிலையில், 'கேம் ஓவர்' என்ற தமிழ் படத்தில் நடிக்க நடிகை டாப்சி ஒப்புக் கொண்டிருக்கிறார். தான் தென்னிந்திய மொழிப் படங்களில் நிறைய நடிக்காதது ஏன் என்பது குறித்து அவர் சமீபத்தில் பேட்டியளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
நிறைய படங்களில் நடிப்பதை நான் விரும்பவில்லை. தரமான படங்கள் சிலவற்றில் நடித்து பெயர் வாங்கினாலே போதும் என நினைக்கிறேன். கேம் ஓவர் படம் அப்படிப்பட்ட ஒரு படமாக இருக்கும் என்று எண்ணியதாலேயே, அதில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறேன். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் எடுக்கப்படும் 'கேம் ஓவர்' படத்துக்கு, நானும் ஒரு தயாரிப்பாளர். படம் நல்ல படம் என்பதால் தான், இதையெல்லாம் கூட நான் செய்கிறேன். வித்தியாசமான கேம்களை உருவாக்கும் கேரக்டர் எனக்கு.
நான் நிறைய நண்பர்களை வைத்துக் கொள்வதில்லை. காரணம், நண்பர்களோடு எமோஷனலாகி நெருக்கம் அதிகமாகி விட்டால், அதில் இருந்து விடுபடுவது கஷ்டம். என் முதல் தெலுங்கு படத்தோட தயாரிப்பாளர் நடிகை லட்சுமி மஞ்சு மட்டும் தான் எனக்கு இருக்கும் ஒரே தோழி. சினிமாவே நிரந்தரம் இல்லாத போது, அத்துறையில், நிறைய தோழிகளை உருவாக்கிக் கொள்ளவும் எனக்கு விருப்பம் இல்லை.
இவ்வாறு டாப்சி கூறியுள்ளார்.