ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சமூக வலைத்தளங்களில் பத்து பேர் சேர்ந்து ஒரு பொய்யைச் சொன்னால் அதை உண்மை என்று நம்புவதற்கு ஒரு கூட்டம் இருக்கிறது. பின்க் படத்தின் ரீமேக்கில் அஜித் நடிக்க உள்ள படத்திற்கு யார் இசையமைப்பாளர் என்பது பற்றி கடந்த சில வாரங்களாக கடுமையான விவாதம் போய்க் கொண்டிருந்தது.
சிலர் யுவன்ஷங்கர் ராஜா என்றனர், சிலர் ஏஆர் ரகுமான் என்றனர். ஆனால், அஜித் தரப்பில் அவரது பிஆர்ஓ எப்போதோ படத்திற்கு இசை யுவன் தான் என்று சொன்னதை யாரும் கேட்டுக் கொள்ளவேயில்லை. ஏஆர் ரகுமான்தான் படத்திற்கு இசையமைக்கிறார் என படத்தின் இயக்குனர் வினோத் பெயரில் உள்ள போலி டுவிட்டர் கணக்கில் வந்த தகவலை பலரும் உண்மை என்று நம்பி அதை பரப்பிக் கொண்டிருந்தனர்.
இப்படி தன் படம் பற்றி சமூக வலைத்தளங்களில் தவறான செய்திகள் பரவுவதை அறிந்த அஜித் தற்போது புதிய முடிவு ஒன்றை எடுத்துள்ளாராம். இனி அவருடைய படம் பற்றிய தகவலை எந்த சமூக வலைத்தளங்களிலும் அதிகாரப்பூர்வமாக வெளியிடக் கூடாது என்று சொல்லிவிட்டாராம். பத்திரிகைச் செய்தி மூலம் முறையாக அறிவியுங்கள் என்று சொன்னதால்தான் அஜித் 59 படம் பற்றிய தகவல்கள் கூட பத்திரிகைச் செய்தியாகவே வெளியிடப்பட்டது என்கிறார்கள்.
அதில் படத்திற்கு இசை யுவன்ஷங்கர் ராஜா என்று குறிப்பிட்ட பிறகுதான் யுவன், ரகுமான் என்ற சர்ச்சை ஓய்ந்தது. இனி, அஜித் பற்றிய அப்டேட் தகவல்களை சமூக வலைத்தளங்களில் வந்தால் நம்பாதீர்கள் என அஜித் தரப்பு தெரிவிக்கிறது.