Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஐஸ்வர்யா ராஜேஷின் நெகிழ்ச்சியான பேச்சு

16 டிச, 2018 - 12:34 IST
எழுத்தின் அளவு:
aishwarya-rajesh-about-kana-movie

காக்கா முட்டை படத்தில் நடித்து பிரபலமானவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் தற்போது சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள கனா படத்தில் கதையின் நாயகியாக நடித்துள்ளார். அருண்ராஜா காமராஜ் இயக்கியுள்ள இந்த படம் வருகிற 21-ந்தேதி திரைக்கு வருகிறது.

இந்த படத்தில் தான் நடித்திருப்பது பற்றி ஐஸ்வர்யா ராஜேஷ் கூறுகையில், ஒரு சாதாரண விவசாயி மகளாக நான் நடித்திருக்கிறேன். எனக்கு கிரிக்கெட் விளையாட்டு மீது ஆர்வம் ஏற்பட்டு, பின்னர் பல எதிப்புகளை மீறி எப்படி இந்திய அளவிலான கிரிக்கெட் அணியில் இணைகிறேன் என்பதுதான் இந்த படத்தின் கதை.


இதில் சத்யராஜ் எனது அப்பாவாக நடித்துள்ளார். முருகேசன் என்ற விவசாயி வேடத்தில் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். நானும் அவரது நிஜ மகளாகவே வாழ்ந்திருக்கிறேன். காரணம், எனது அப்பா நான் 10 வயதாக இருந்தபோதே இறந்து விட்டார். அதனால் சத்யராஜ் என்னை ஒரு நிஜ மகளாகவே நினைத்து நடித்த நடிப்பு என்னை நெகிழ வைத்தது. அந்த வகையில், இந்த படத்தில் நடித்த பிறகும் அவரை எனது அப்பா ஸ்தானத்தில் வைத்தே பார்த்து வருகிறேன் என்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)