அமரன் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பு | வீர தீர சூரன் படத்தில் மூன்று தோற்றத்தில் நடிக்கும் விக்ரம் | ஜூனியர் என்டிஆரை இயக்கும் அஜய் ஞானமுத்து? | ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் |
2 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த இந்திப் படம் பிங்க். இந்தப் படம்தான் இப்போது அஜீத் நடிப்பில் ரீமேக் ஆக இருக்கிறது. தீரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்கிய எச்.வினோத் இயக்குகிறார். பிங்க் படத்தில் அமிதாப்பச்சன், டாப்ஸி, கிர்தி குல்கரி, ஆண்ட்ரியா டர்னிங் நடித்திருந்தனர். அனிருத்ரா ராய் சவுத்ரி இயக்கி இருந்தார். படத்தின் கதை இதுதான்.
டெல்லியில் பணி புரியும் மூன்று இளம்பெண்களின் வாழ்வில் நடக்கும் ஒரு சம்பவம் தான் கதையின் பிண்னனி. மீனல் அரோரா (டாப்சி) ஒரு வெஸ்டர்ன் டான்சர். அவரது தோழிகள் பலக், ஆண்ட்ரியா. இருவரும் தனியார் நிறுவன ஊழியர்கள். டெல்லியில் வீடு எடுத்து தங்கி வேலை பார்க்கிறார்கள்.
நண்பர்களுடன் ஒருநாள் இரவு உணவு அருந்த ஒரு ஹோட்டலுக்கு செல்கிறார்கள். விருந்துக்கு சென்ற இடத்தில் ஒரு சின்ன மோதலில் டாப்ஸி ஒரு அதிகாரம் படைத்த ஒருவரின் மகனை பாட்டிலால் அடித்து விடுகிறார். இது அங்கு எதிர்பாராத விதமாக நடக்கும் ஒரு சம்பவம், அதன் தொடர்ச்சியாக இப்பெண்களுக்கு ஏற்ப்படும் தொல்லைகள், சட்டமும், காவல்துறையும் சேர்ந்துகொண்டு இப்பெண்களை பாடாய்படுத்துகிறது. அதிலிருந்து எவ்வாறு வெளி வருகிறார்கள், என்னென்ன நடக்கிறது என்பதுதான் கதை. இந்த பெண்களை காப்பாற்றும் வழக்கறிஞர் அமிதாப் பச்சன்.
அமிதாப் நடித்த வழக்கறிஞர் கேரக்டரில்தான் அஜீத் நடிக்கிறார். மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது. பிங்க் படம் தமிழில் ரீமேக் செய்யப்பட வேண்டும். அதில் அஜீத் நடிக்க வேண்டும் என்பது ஸ்ரீதேவியும், அஜீத்தும் சேர்ந்து எடுத்த முடிவு என்கிறார் ஸ்ரீதேவியின் கணவரும், தயாரிப்பாளருமான போனி கபூர். அவர் மேலும் கூறியிருப்பதாவது:
இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தில் அஜித்துடன் இணைந்து பணியாற்றிய போது, எங்கள் தயாரிப்பில் தமிழில் அவர் ஒரு படம் நடிக்க வேண்டும் என்று ஸ்ரீதேவி விரும்பினார். கடந்த ஆண்டு வரை நல்ல கதை கிடைக்கவில்லை. பிங்க் படத்தை தமிழில் தயாரிக்கலாம் என்ற எண்ணத்தை அஜித் தெரிவித்தார். அஜித் அந்த படத்தில் நடித்தால், அதை ஒரு சிறந்த படமாக உருவாக்க முடியும் என்று ஸ்ரீதேவியும் அந்த எண்ணத்தை ஏற்றுக் கொண்டார். தமிழ் படம் தயாரிப்பதை நான் பெருமையாக கருதுகிறேன். பிங்க் படத்தை தமிழில் எடுப்பதிலும், அஜித்துடன் இணைந்து பணி புரிவதிலும் மகிழ்ச்சி அடைகிறேன். மே மாதம் 1-ந்தேதி படத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு இருக்கிறோம். என்கிறார் போனி கபூர்.