கவிஞர் வாலி விருது பெறும் கங்கை அமரன் | எழுத்தாளர் பூமணியின் கசிவு கதையில் நடித்த எம்.எஸ்.பாஸ்கர் | மீண்டும் ஹீரோவான ஆனந்த்ராஜ் | போலீஸ் கமிஷனரிடம் அம்பிகா வைத்த கோரிக்கை | போதை பொருள் விவகாரம் : ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு சம்மன் | பிளாஷ்பேக் : சபரிமலையில் படப்பிடிப்பு ; நடிகைகளுக்கு அபராதம் | பிளாஷ்பேக் : சினிமாவான கல்கியின் சமூக கதை | தனி கதாநாயகனாக முதல் வெற்றியைப் பதிவு செய்த துருவ் விக்ரம் | பிரபாஸ் பிறந்தநாளில் 3 அப்டேட்கள் தந்த தயாரிப்பாளர்கள் | பிரதீப் ரங்கநாதனும்... பின்னே மலையாள ஹீரோயின்களின் ராசியும்… |

விஜய் சேதுபதியின் 25-ஆவது படமாக பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் 'சீதக்காதி' திரைப்படம் வருகிற 20-ஆம் தேதி வெளியாகிறது. அர்ச்சனா, மவுலி, இயக்குனர் மகேந்திரன், பகவதி பெருமாள், ராஜ்குமார், ரம்யா நம்பீசன், பார்வதி நாயர், காயத்ரி சங்கர், கருணாகரன், சுனில், டீகே உட்பட பலர் நடித்துள்ள இப்படத்தில் நாடக நடிகராக நடித்திருக்கிறார் விஜய்சேதுபதி.
படத்தில் அவர் சம்மந்தப்பட்ட காட்சிகள் 40 நிமிடங்கள் இடம்பெறுகின்றன. சினிமா நடிகராவதற்கு முன் நாடக நடிகராக தோன்றுகிறார் விஜய் சேதுபதி. அந்த காட்சிகளில் 17 நாடக நடிகர் - நடிகைகளை நடிக்க வைத்திருக்கிறார்கள். இன்னும் சில நாட்களில் வெளியாக இருக்கும் நிலையில் 'சீதக்காதி'யில் நடித்துள்ள 17 நாடக நடிகர், நடிகைகளையும் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் அறிமுகப்படுத்தி வைத்தார்கள் 'சீதக்காதி' படக்குழுவினர்.
''இந்த படத்தில் இவர்களது பங்களிப்பு மிக முக்கியமானதாக அமைந்துள்ளது. இவர்கள் ஒவ்வொருவரும், ஒவ்வொரு கேரக்டரில் சிறந்த நடிப்பை வழங்கியுள்ளனர். அதை நீங்கள் படத்தை பார்க்கும்போது உணர்வீர்கள்.” என்று குறிப்பிட்டார் நடிகர் விஜய்சேதுபதி.




