வெகுளித்தனமாக பதில் சொல்லி குஞ்சாக்கோ போபனுக்கு சங்கடத்தை கொண்டு வந்த டூப் ஆர்ட்டிஸ்ட் | விடாப்பிடியாக நின்று மோகன்லாலை சந்தித்த 80 வயது ரசிகை | பிளாஷ்பேக்: மொழி மாற்றம் செய்து வியாபாரப் போட்டியில் வென்று காட்டிய ஏ வி எம்மின் 'அரிச்சந்திரா' | ரஜினி பட இயக்குனர் யார் ? பரவும் தகவல்கள் | அன்பே வா, அவள் வருவாளா, நம்ம வீட்டுப் பிள்ளை - ஞாயிறு திரைப்படங்கள் | சம்பளத்திற்காக மிரட்டும் நடிகை | நான் கொடூரக்கோலத்தில் இருந்தாலும் என் கணவர் ரசிப்பார்..! கீர்த்தி சுரேஷ் ‛ஓபன்டாக்' | நிஜ போலீஸ் டூ 'பேட்பெல்லோ' வில்லன்: கராத்தே கார்த்தியின் கதை | ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? |

விஜய் சேதுபதியின் 25-ஆவது படமாக பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் 'சீதக்காதி' திரைப்படம் வருகிற 20-ஆம் தேதி வெளியாகிறது. அர்ச்சனா, மவுலி, இயக்குனர் மகேந்திரன், பகவதி பெருமாள், ராஜ்குமார், ரம்யா நம்பீசன், பார்வதி நாயர், காயத்ரி சங்கர், கருணாகரன், சுனில், டீகே உட்பட பலர் நடித்துள்ள இப்படத்தில் நாடக நடிகராக நடித்திருக்கிறார் விஜய்சேதுபதி.
படத்தில் அவர் சம்மந்தப்பட்ட காட்சிகள் 40 நிமிடங்கள் இடம்பெறுகின்றன. சினிமா நடிகராவதற்கு முன் நாடக நடிகராக தோன்றுகிறார் விஜய் சேதுபதி. அந்த காட்சிகளில் 17 நாடக நடிகர் - நடிகைகளை நடிக்க வைத்திருக்கிறார்கள். இன்னும் சில நாட்களில் வெளியாக இருக்கும் நிலையில் 'சீதக்காதி'யில் நடித்துள்ள 17 நாடக நடிகர், நடிகைகளையும் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் அறிமுகப்படுத்தி வைத்தார்கள் 'சீதக்காதி' படக்குழுவினர்.
''இந்த படத்தில் இவர்களது பங்களிப்பு மிக முக்கியமானதாக அமைந்துள்ளது. இவர்கள் ஒவ்வொருவரும், ஒவ்வொரு கேரக்டரில் சிறந்த நடிப்பை வழங்கியுள்ளனர். அதை நீங்கள் படத்தை பார்க்கும்போது உணர்வீர்கள்.” என்று குறிப்பிட்டார் நடிகர் விஜய்சேதுபதி.




