பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
விஜய் சேதுபதியின் 25-ஆவது படமாக பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் 'சீதக்காதி' திரைப்படம் வருகிற 20-ஆம் தேதி வெளியாகிறது. அர்ச்சனா, மவுலி, இயக்குனர் மகேந்திரன், பகவதி பெருமாள், ராஜ்குமார், ரம்யா நம்பீசன், பார்வதி நாயர், காயத்ரி சங்கர், கருணாகரன், சுனில், டீகே உட்பட பலர் நடித்துள்ள இப்படத்தில் நாடக நடிகராக நடித்திருக்கிறார் விஜய்சேதுபதி.
படத்தில் அவர் சம்மந்தப்பட்ட காட்சிகள் 40 நிமிடங்கள் இடம்பெறுகின்றன. சினிமா நடிகராவதற்கு முன் நாடக நடிகராக தோன்றுகிறார் விஜய் சேதுபதி. அந்த காட்சிகளில் 17 நாடக நடிகர் - நடிகைகளை நடிக்க வைத்திருக்கிறார்கள். இன்னும் சில நாட்களில் வெளியாக இருக்கும் நிலையில் 'சீதக்காதி'யில் நடித்துள்ள 17 நாடக நடிகர், நடிகைகளையும் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் அறிமுகப்படுத்தி வைத்தார்கள் 'சீதக்காதி' படக்குழுவினர்.
''இந்த படத்தில் இவர்களது பங்களிப்பு மிக முக்கியமானதாக அமைந்துள்ளது. இவர்கள் ஒவ்வொருவரும், ஒவ்வொரு கேரக்டரில் சிறந்த நடிப்பை வழங்கியுள்ளனர். அதை நீங்கள் படத்தை பார்க்கும்போது உணர்வீர்கள்.” என்று குறிப்பிட்டார் நடிகர் விஜய்சேதுபதி.