சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
நடிகர் ரஜினிகாந்த் நடித்து, கடந்த நவ.,29ம் தேதி வெளியான 2.0 படம், உலகம் முழுக்க வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. அடுத்தப்படியாக பேட்ட படம் பொங்கலுக்கு வெளியாகிறது. நேற்று, ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு பேட்ட டீசரை வெளியிட்டனர். வெளியான 24 மணிநேரத்தில் 72 லட்சத்திற்கும் அதிகமான பேர் யு-டியூப்பில் டீசரை பார்வையிட்டுள்ளனர்.
இந்நிலையில், மும்பையில் இருந்து சென்னை திரும்பிய ரஜினி, போயஸ் தோட்ட இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் பேசுகையில், மேகதாது அணை கட்டினால் தமிழகத்திற்கு பாதிப்பு வராது என கூறப்படுவது எந்தளவிற்கு உண்மை என ஆராய வேண்டும். தமிழகத்திற்கு பிரச்னை ஏற்படும் என்றால் அதை சட்டரீதியாக எதிர்கொள்ள வேண்டும். பேட்ட படம் வெளியான பிறகே அடுத்தப்படம் பற்றி முடிவு செய்ய முடியும் என்றார்.
பேட்ட படத்திற்கு பிறகு ரஜினி, முருகதாஸ் படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் அரசியலில் களம் காண இருக்கும் ரஜினி, தொடர்ந்து படங்களில் நடிப்பாரா.? அல்லது, கமல்ஹாசன் போன்று நடிக்க மாட்டேன் என அறிவிப்பாரா.? என்பது பேட்ட வெளியானதும் தெரிந்துவிடும்.