ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கடந்த தீபாவளி அன்று வெளிவந்த படம் சர்கார். இந்தப் படம் வெளிவந்த அன்று, களவாணி மாப்பிள்ளை, பில்லா பாண்டி படங்கள் வெளிவந்தன. இன்னும் வெளிவருதாக அறிவித்த சில படங்களும் விலகிக் கொண்டன. இந்த நிலையில் பெட்டிக்கடை என்ற சிறு பட்ஜெட் படத்தின் இயக்குனர் இசக்கி கார்வண்ணன், சர்காருடன் மோத தயாராக இருந்திருக்கிறார். இதனை அதில் நடித்திருக்கும் சமுத்திரகனி தடுத்திருக்கிறார். இதனை அவரே அந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் தெரிவித்தார். விழாவில் மேலும் அவர் பேசியதாவது :
இது ஒரு நல்ல படம். நாம் கடந்து வந்த விஷயம். நாம் வேண்டாம் என்று விட்டுட்டு வந்த விஷயத்தையும் சொல்லி இருக்காங்க. இது அடுத்த தலைமுறையை எப்படி பாதிக்கும். அடுத்த தலைமுறைக்கு நாம் என்ன விட்டுட்டு போறோம்கிற கதையையும் இதில் சொல்லி இருக்கார் இயக்குனர்.
டைரக்டர் இசக்கி கார்வண்ணனைப் பற்றி சொல்லனும்னா இளம் கன்று பயமறியாதுன்னு சொல்வோமே, அது மாதிரி தான். திடீரென்று ஒரு நாள் வந்து சர்க்கார் படத்து ரிலீஸ் தேதிக்கே நம்ம படத்தையும் ரிலீஸ் செய்வோம். அவங்க சர்க்காரைப் பற்றி சொல்றாங்க. நாம சமூக விரோதிகளைப் பற்றி சொல்றோம். ஒரே தேதில ரிலீஸ் செய்வோம் என்றார். நான் தான் அப்படியெல்லாம் வேணாம். நமக்குன்னு ஒரு தேதி வரும் அப்ப ரிலீஸ் செய்வோம் என்று அனுப்பி வைத்தேன். அந்தளவுக்கு அவருக்கு படத்து மேலே அவ்வளவு நம்பிக்கை.
இவ்வாறு சமுத்திரகனி பேசினார்.