ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றுப் படம் 'மகாநடி' என்ற பெயரில் தெலுங்கில் தயாராகி கடந்த மே மாதம் வெளியானது. தமிழில் அந்தப் படம் 'நடிகையர் திலகம்' என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இரண்டு மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்றது. சாவித்ரி கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து அனைவரையும் வியக்க வைத்தார். அவருடைய நடிப்பு அவ்வளவு இயல்பாக இருந்ததாக அனைவரும் பாராட்டினார்கள்.
'மகாநடி' படத்திற்குப் பின் கீர்த்தி சுரேஷ் மீதான இமேஜ் முற்றிலும் மாறியது என்பதே உண்மை. நேற்று சாவித்ரியின் பிறந்த நாளை முன்னிட்டு 'மகாநடி' படக்குழு சார்பில் கீர்த்தி சுரேஷ் அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
“எப்போதும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளக் கூடிய உங்களுக்காக இது. நீங்கள் எங்களைத் தேர்வு செய்தீர்கள், எங்களை உங்கள் அன்பாலும், ஆசீர்வாதத்தாலும் நனைய வைத்தீர்கள். இங்கு இருப்பதற்கு எதிர்ப்புகளை சமாளிக்கவும், எல்லைகளைக் கடக்கவும் அனைத்து சக்திகளையும், எங்களுக்கு வழங்கினீர்கள். எங்களுக்குக் கிடைத்த அனைத்திற்கும் நாங்கள் தகுதியானவர்கள் என்பதை உணர வைத்தீர்கள். உங்களை நானும் மகிழ்ச்சியடைய வைத்தேன் என நம்புகிறேன்.
மகாநடி, நடிகையர் திலகம் உங்களை மீண்டும் இந்த வாழ்க்கைக்குள் அழைத்து வந்துள்ளது. உங்களுக்கு நாங்கள் எங்களது நியாயத்தை சரியாக வழங்கியிருக்கிறோம் என நம்புகிறோம். எங்களால் முடிந்ததை நாங்கள் செய்தோம். நீங்கள் எப்போதும் வேறு யாராலும் மாற்ற முடியாத ஒருவர். நீங்கள் எங்கள் வாழ்க்கையை மாற்றினீர்கள், எங்கள் வாழ்வையும் மாற்றினீர்கள், நன்றி சாவித்ரியம்மா,” என கீர்த்தி சுரேஷ் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.