‛வட சென்னை' பின்னணியில் வெற்றிமாறன் - சிம்பு படம்: அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் தாணு | அக்டோபர் முதல் வாரத்தில் நெட்பிளிக்ஸில் வெளியாகும் ‛வார்-2' | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் டிக்கெட் முன்பதிவு எத்தனை கோடி? | பைனான்ஸ் பிரச்னை காரணமாக ஜேசன் சஞ்சய் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தமா? | தனுஷின் ‛இட்லி கடை' படத்தை வெளியிடும் இன்பன் உதயநிதி! | உங்களை விட்டால் யார் இருக்கா ? அனுஷ்காவிடம் ராணா கலாட்டா | பிஜூமேனன் நடிப்பதாக இருந்த ‛கீர்த்தி சக்ரா' ; மோகன்லாலுக்கு கை மாறியது ஏன் ? இயக்குனர் மேஜர் ரவி புதிய தகவல் | நிவின்பாலியின் படங்களை பாராட்டிய பவன் கல்யாண் | ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில் வசனம் இல்லாமல் வெளியாகும் ‛உப் யே சியாபா' | யார் இடத்தையும் யாரும் பிடிக்கவில்லை: சிவகார்த்திகேயன் |
சூப்பர் ஸ்டார் ரஜினி நடத்த 2.0 படம் சமீபத்தில் வெளிவந்தது. படம் எதிர்பார்த்த அளவிற்கு பெரும் வரவேற்பை பெறவில்லை என்றாலும் ஓரளவுக்கு தயாரிப்பு தரப்புக்கு திருப்தி தரும் அளவிற்கு வியாபாரமான படம். இன்னும் சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் திரையிடப்படும்போது தயாரிப்பு தரப்பு லாபம் ஈட்டும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் ரஜினியின் பேட்ட படம் பொங்கலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டு, அதற்கான புரமோசன் பணிகளை இப்போதே தொடங்கி விட்டார்கள். இந்தப் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி உள்ளார். சிம்ரன், த்ரிஷா, விஜய் சேதுபதி, பாபிசிம்ஹா உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். அனிருத் இசை அமைத்திருக்கிறார். இதில் ரஜினி காளி என்ற காட்பாதர் கேரக்டரில் நடித்திருக்கிறார்.
இதற்கு அடுத்து ரஜினி நடிக்கும் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். இந்தப் படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பதாக இருந்தது. ஆனால் ரஜினி 2.0 படத்தை தயாரித்த லைக்கா நிறுவனத்திற்கு படத்தை கொடுத்திருக்கிறார். தன்னை நம்பி பெரிய ரிஸ்க் எடுத்த நிறுவனத்துக்கு பரிசாக இதனை கொடுத்திருக்கிறார்.
விரைவில் ரஜினி அரசியலில் குதிக்க இருப்பதால் இந்தப் படம், பக்கா அரசியல் படமாக உருவாக இருக்கிறது. இதை அறிந்து கொண்டதால்தான் தமிழக அரசு ஏ.ஆர்.முருதாஸ் மீது வழக்கு தொடர்ந்து இனிமேல் அரசை விமர்சித்து படம் எடுக்க மாட்டேன் என்று நீதிமன்றம் மூலம் உறுதி வாங்க நினைத்தது. ஆனால் அது நடக்கவில்லை. மன்னிப்பு கேட்க மறுத்து விட்டதோடு இனியும் விமர்சனம் செய்யமாட்டேன் என்பதற்கு உத்தரவாதமும் தர மாட்டேன் என்று கூறிவிட்டார்.
படத்தின் ஒன் லைனை கூறி ரஜினியிடம் சம்மதம் வாங்கிவிட்டார் முருகதாஸ். அதில் என்னென்ன நாட்டு நடப்புகள் வரவேண்டும். உத்தேசமாக என்னென்ன வசனங்கள் இருக்க வேண்டும் என்பது குறித்தும் முருகதாசிடம் ரஜினி கூறிவிட்டாராம். படத்தின் தலைப்பு அரசியல் சார்ந்து இருக்க வேண்டும் என்றும் கூறினாராம்.
படத்திற்கு நாற்காலி என்று டைட்டில் வைக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த தலைப்புக்கு ரஜினி இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை என்று தெரிகிறது. ஒப்புதல் தந்த பிறகு அதிகாரபூர்வமாக வெளியிடப்படலாம்.
"நாற்காலிக்கு சண்டை போடும் நாடு நம் பாரத நாடு" என்று குரு சிஷ்யன் படத்தில் ரஜினி பாடல் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.