ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இயற்கை விவசாயி நெல் ஜெயராமன் சென்னையில் காலமானார். இவருக்கு நடிகர்கள் கமல், சிவகார்த்திகேயன், கார்த்தி ஆகியோர் அஞ்சலி செலுத்தி உள்ளனர்.
நெல் ஜெயராமனின் உடலை அவரது சொந்த ஊருக்கு எடுத்துச் செல்வதற்கான செலவையும், அவரது மகனின் கல்வி செலவையும் ஏற்பதாக நடிகர் சிவகார்த்திகேயன் அறிவித்துள்ளார்.
கார்த்தி
நேரில் சென்று நெல் ஜெயராமன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் கார்த்தி பேசியதாவது : தன்னலம் கருதாமல் மக்கள் நலமாக இருக்க வேண்டும் என்றும், இயற்கை உணவு சப்பிட வேண்டும் என்றும், இயற்கை விவசாயம் செய்ய வேண்டும் என ஓடி ஓடி வேலை செய்தவர் நெல் ஜெயராமன். மக்களின் நலனுக்காக உழைத்தவர்களின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வது மிக முக்கியம்.
நாம் ஞாபகம் வைத்து கொள்ள வேண்டியது அவர் நம்மிடம் திரும்ப, திரும்ப கூறியது இயற்கை உணவாக சாப்பிடுங்கள் என்பது தான். இயற்கை உணவை அதிக விலைக்கு விற்றாலும் அதை வாங்குங்கள். அதுதான் அவர்களை ஊக்கப்படுத்தும். இதை நாம் ஞாபகம் வைத்துக்கொண்டாலே அவருக்கு செய்ய வேண்டிய மிகப் பெரிய தொண்டாக இருக்கும் என தெரிவித்தார்.
இதே போன்று டுவிட்டரில் கமல் வெளியிட்டுள்ள பதிவில்,
தமிழர்களின் மரபும் வரலாறும் உணவுடன் உறவாடிக்கிடந்ததை உணர்ந்து, அதை மீட்டெடுத்து பாதுகாத்த திரு. நெல்.ஜெயராமன் அவர்களின் மறைவு நம் அனைவருக்கும் பேரிழப்பு. அவர் பாதுகாத்திட்ட பாரம்பரிய நெல் போல அவரின் சிந்தனையையும் செயலையும் நாம் ஒவ்வொருவரும் பாதுகாத்திட வேண்டும்.
— Kamal Haasan (@ikamalhaasan) December 6, 2018