வீர தீர சூரன் படத்தில் மூன்று தோற்றத்தில் நடிக்கும் விக்ரம் | ஜூனியர் என்டிஆரை இயக்கும் அஜய் ஞானமுத்து? | ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் |
தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி நடிகரான மகேஷ் பாபு ஐதராபாத்தில், கச்சிபௌலி என்ற இடத்தில் எஎம்பி சினிமாஸ் என்ற 7 தியேட்டர்கள் கொண்ட மல்டிபிளக்ஸ் தியேட்டரை இன்று(டிச., 2) திறந்துள்ளார். ஆசியன் சினிமாஸ் என்ற நிறுவனத்துடன் இணைந்து அந்த மல்டிபிளக்ஸ் தியேட்டரில் முதலீடு செய்திருக்கிறார் மகேஷ்பாபு.
மாலை முதல் அங்கு படங்கள் திரையிடப்பட்டன. 2.0 படத்தின் தெலுங்கு, தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளில் படங்கள் அங்கு திரையிடப்படுகின்றன. தியேட்டரை பல திரைப்பிரபலங்கள் சில நாட்கள் முன்னதாகவே பார்வையிட்டு பாராட்டி உள்ளார்கள்.
தியேட்டரின் திறப்பு விழா தெலுங்குத் திரையுலகின் பல பிரபலங்கள் கலந்து கொள்ள நடைபெற்றது. மொத்த நிகழ்வையும் தன்னுடைய யு டியூப் சேனலில் இடம் பெற வைத்துள்ளார் மகேஷ் பாபு.
7 தியேட்டர்களில் 1600 பேர் உட்கார்ந்து படம் பார்க்கும் வசதியும், 3டி திரையிடல், டால்பி அட்மாஸ்பியர் ஒலி அமைப்பு என சர்வதேச தரத்தில் தியேட்டர்கள் உருவாக்கப்பட்டுள்ளது. அனைவரும் பார்க்க வசதியாக கோல்டு டிக்கெட் கட்டணத்தை 200 ரூபாயும், பிளாட்டினம் டிக்கெட் கட்டணம் 300 ஆகவும் நிர்ணயம் செய்துள்ளார்கள்.
ஐதராபாத்தின் புதிய அடையாளமாக இனி எஎம்பி சினிமாஸும் இருக்கும் என தெலுங்குத் திரையுலகப் பிரமுகர்கள் பாராட்டு தெரிவித்துள்ளார்கள்.