நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் | நான்கு மொழிகளில் ரீமேக்காகும் ஹிட் தொடர் | அந்தமானுக்கு ஹனிமூன் சென்ற சுவாசிகா - பிரேம் ஜாக்கப் | ஒரே வருடத்தில் எண்ட் கார்டு போட்ட ஹிட் சீரியல் : ரசிகர்கள் வருத்தம் | அமரன் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பு |
தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி நடிகரான மகேஷ் பாபு ஐதராபாத்தில், கச்சிபௌலி என்ற இடத்தில் எஎம்பி சினிமாஸ் என்ற 7 தியேட்டர்கள் கொண்ட மல்டிபிளக்ஸ் தியேட்டரை இன்று(டிச., 2) திறந்துள்ளார். ஆசியன் சினிமாஸ் என்ற நிறுவனத்துடன் இணைந்து அந்த மல்டிபிளக்ஸ் தியேட்டரில் முதலீடு செய்திருக்கிறார் மகேஷ்பாபு.
மாலை முதல் அங்கு படங்கள் திரையிடப்பட்டன. 2.0 படத்தின் தெலுங்கு, தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளில் படங்கள் அங்கு திரையிடப்படுகின்றன. தியேட்டரை பல திரைப்பிரபலங்கள் சில நாட்கள் முன்னதாகவே பார்வையிட்டு பாராட்டி உள்ளார்கள்.
தியேட்டரின் திறப்பு விழா தெலுங்குத் திரையுலகின் பல பிரபலங்கள் கலந்து கொள்ள நடைபெற்றது. மொத்த நிகழ்வையும் தன்னுடைய யு டியூப் சேனலில் இடம் பெற வைத்துள்ளார் மகேஷ் பாபு.
7 தியேட்டர்களில் 1600 பேர் உட்கார்ந்து படம் பார்க்கும் வசதியும், 3டி திரையிடல், டால்பி அட்மாஸ்பியர் ஒலி அமைப்பு என சர்வதேச தரத்தில் தியேட்டர்கள் உருவாக்கப்பட்டுள்ளது. அனைவரும் பார்க்க வசதியாக கோல்டு டிக்கெட் கட்டணத்தை 200 ரூபாயும், பிளாட்டினம் டிக்கெட் கட்டணம் 300 ஆகவும் நிர்ணயம் செய்துள்ளார்கள்.
ஐதராபாத்தின் புதிய அடையாளமாக இனி எஎம்பி சினிமாஸும் இருக்கும் என தெலுங்குத் திரையுலகப் பிரமுகர்கள் பாராட்டு தெரிவித்துள்ளார்கள்.