சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
நடிகரும், மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல்ஹாசன், தொடர்ந்து இரண்டாவது நாளாக கஜா புயலால் பாதிக்கப்பட்ட ஊர்களை பார்வையிட்டு, அந்த மக்களிடம் குறைகளை கேட்டறிந்தும், நிவாரண பொருட்களை வழங்கியும் வருகிறார்.
அரசு இயந்திரம் இன்னும் வேகமாக செயல்பட வேண்டும், உதவிகளை விரைவுப்படுத்த வேண்டும். இது தமிழ்நாட்டிற்கு மட்டுமான சோகம் இல்லை, ஒட்டுமொத்த இந்தியாவிற்கான சோகம். அரசியலுக்கு அப்பாற்பட்டு மனிதத்துடன் அனைவரும் ஒன்று சேர்ந்து மக்களின் துயரினைத் துடைத்திட வேண்டும் என டுவிட்டரில் கூறியிருந்தார்.
ஆனால் தொடர்ந்து கமலைப்பற்றி ஆளும் கட்சியினர் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் டுவிட்டரில் கமல் பதிவிட்டிருப்பதாவது : "கஜா புயல் கடந்த பூமியை பார்வையிட்ட பின்னும் பெருஞ்சேதம் ஒன்றும் இல்லை என ஊடகங்களில் கொஞ்சம் கூட கூச்சமில்லாமல் அறிவிக்கும் அரசியல்வாதிகளை முதலில் நாம் தேசத்தின் பேரிடராக அடையாளம் காண வேண்டும்" என பதிவிட்டிருக்கிறார்.