பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ |

தமிழ்நாட்டில் நடக்கும் சில முக்கிய விஷயங்களைப் பற்றி எப்போதுமே எதிர்மறையான கருத்துக்களைப் பதிவிடுபவர் தெலுங்கு இயக்குனர் ராம்கோபால் வர்மா. அவரது தயாரிப்பில் சித்தார்த்தா இயக்கத்தில் தனஞ்செயா, இர்ரா மோர் நடித்துள்ள 'பைரவ கீதா' படம் நவம்பர் 30ம் தேதி வெளியாக உள்ளது.
நவம்பர் 29ம் தேதி 2.0 படம் தெலுங்கிலும் வெளியாவதால் 'பைரவ கீதா' படத்தைப் பார்க்க ரசிகர்கள் வருவார்களா என்ற சந்தேகம் ராம்கோபால் வர்மாவுக்கு இருக்கிறது. அதனால் முடிந்தவரை 2.0 படத்தைப் பற்றி ஏதாவது குறையாகப் பதிவிட வேண்டும் என்று நினைத்து அந்தப் படத்தைப் பற்றி அடிக்கடி பேசி வருகிறார்.
நேற்று டுவிட்டரில், “ரோபோட் 2.0 படம் ஒரு பெரிய இயக்குனர் சின்னக் குழந்தைகளுக்காக எடுத்துள்ள சினிமா, பைரவ கீதா ஒரு சின்ன இயக்குனர் பெரியவர்களுக்காக எடுத்துள்ள சினிமா” எனக் குறிப்பிட்டுள்ளார்.
2.0 படம் குழந்தைகளுக்கான படம் என அவர் 'டிகிரேட்' செய்ய விரும்புகிறார். இருப்பினும் அதுதான் '2.0' படத்தின் பலம் என்பது ராம்கோபால் வர்மாவுக்குத் தெரியாமல் இருப்பது ஆச்சரியமாக உள்ளது.




