பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
தமிழ்நாட்டில் நடக்கும் சில முக்கிய விஷயங்களைப் பற்றி எப்போதுமே எதிர்மறையான கருத்துக்களைப் பதிவிடுபவர் தெலுங்கு இயக்குனர் ராம்கோபால் வர்மா. அவரது தயாரிப்பில் சித்தார்த்தா இயக்கத்தில் தனஞ்செயா, இர்ரா மோர் நடித்துள்ள 'பைரவ கீதா' படம் நவம்பர் 30ம் தேதி வெளியாக உள்ளது.
நவம்பர் 29ம் தேதி 2.0 படம் தெலுங்கிலும் வெளியாவதால் 'பைரவ கீதா' படத்தைப் பார்க்க ரசிகர்கள் வருவார்களா என்ற சந்தேகம் ராம்கோபால் வர்மாவுக்கு இருக்கிறது. அதனால் முடிந்தவரை 2.0 படத்தைப் பற்றி ஏதாவது குறையாகப் பதிவிட வேண்டும் என்று நினைத்து அந்தப் படத்தைப் பற்றி அடிக்கடி பேசி வருகிறார்.
நேற்று டுவிட்டரில், “ரோபோட் 2.0 படம் ஒரு பெரிய இயக்குனர் சின்னக் குழந்தைகளுக்காக எடுத்துள்ள சினிமா, பைரவ கீதா ஒரு சின்ன இயக்குனர் பெரியவர்களுக்காக எடுத்துள்ள சினிமா” எனக் குறிப்பிட்டுள்ளார்.
2.0 படம் குழந்தைகளுக்கான படம் என அவர் 'டிகிரேட்' செய்ய விரும்புகிறார். இருப்பினும் அதுதான் '2.0' படத்தின் பலம் என்பது ராம்கோபால் வர்மாவுக்குத் தெரியாமல் இருப்பது ஆச்சரியமாக உள்ளது.