'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
தமிழ்நாட்டில் நடக்கும் சில முக்கிய விஷயங்களைப் பற்றி எப்போதுமே எதிர்மறையான கருத்துக்களைப் பதிவிடுபவர் தெலுங்கு இயக்குனர் ராம்கோபால் வர்மா. அவரது தயாரிப்பில் சித்தார்த்தா இயக்கத்தில் தனஞ்செயா, இர்ரா மோர் நடித்துள்ள 'பைரவ கீதா' படம் நவம்பர் 30ம் தேதி வெளியாக உள்ளது.
நவம்பர் 29ம் தேதி 2.0 படம் தெலுங்கிலும் வெளியாவதால் 'பைரவ கீதா' படத்தைப் பார்க்க ரசிகர்கள் வருவார்களா என்ற சந்தேகம் ராம்கோபால் வர்மாவுக்கு இருக்கிறது. அதனால் முடிந்தவரை 2.0 படத்தைப் பற்றி ஏதாவது குறையாகப் பதிவிட வேண்டும் என்று நினைத்து அந்தப் படத்தைப் பற்றி அடிக்கடி பேசி வருகிறார்.
நேற்று டுவிட்டரில், “ரோபோட் 2.0 படம் ஒரு பெரிய இயக்குனர் சின்னக் குழந்தைகளுக்காக எடுத்துள்ள சினிமா, பைரவ கீதா ஒரு சின்ன இயக்குனர் பெரியவர்களுக்காக எடுத்துள்ள சினிமா” எனக் குறிப்பிட்டுள்ளார்.
2.0 படம் குழந்தைகளுக்கான படம் என அவர் 'டிகிரேட்' செய்ய விரும்புகிறார். இருப்பினும் அதுதான் '2.0' படத்தின் பலம் என்பது ராம்கோபால் வர்மாவுக்குத் தெரியாமல் இருப்பது ஆச்சரியமாக உள்ளது.