ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கடந்த சில தினங்களுக்கு முன் மீ டூ விவகாரம் குறித்து நடிகர் மோகன்லாலிடம் கேட்கப்பட்டபோது, 'அது கூடிய விரைவில் காணாமல் போய்விடும்' என கிண்டலாக பதில் கூறினார். இதற்கு சில நடிகைகள், சமூக ஆர்வலர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது.
இந்நிலையில் தற்போது மோகன்லாலுடன் ஒடியன் என்கிற படத்தில் நடித்துள்ள நடிகர் பிரகாஷ்ராஜ், இதுபற்றி கூறும்போது, மோகன்லால் விவேகமானவர் தான் என்றாலும் இதுபோன்ற சென்சிட்டிவ்வான விஷயங்களை பற்றி பேசும்போது வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும் மோகன்லால் எந்த உள்ளர்த்தமும் இல்லாமல் தற்செயலாக இதை பேசியிருப்பார் என்று தான் நினைக்கிறேன் என கூறியுள்ள பிரகாஷ்ராஜ், தான் மீ டூ' பிரசாரத்தை ஆதரிப்பதாகவும் கூறியுள்ளார்.