சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
பாலிவுட் மட்டுமல்லாமல், தென்னிந்திய திரையுலகையும் அதிரவைத்த மீ டூ விவகாரம், மற்ற பூதாகரமான பிரச்சனைகளால் சமீப நாட்களாக கொஞ்சம் கொஞ்சமாக வலுவிழந்து வருவது போலத்தான் தெரிகிறது. இதைத்தான் சமீபத்தில் நடிகர் மோகன்லால் குறிப்பிட்டு பேசும்போது, மீ டூ விவகாரம் போகப்போக தேய்ந்து, கொஞ்ச நாட்களில் அழிந்தே போய்விடும்” என கூறினார்,
இதற்கு பெண்கள் தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியதுடன், திரையுலகில் இருந்தும் எதிர் கருத்துக்கள் வெளிவர ஆரம்பித்துள்ளன. சமீபத்தில் மோகன்லாலின் இந்த கருத்தை நடிகை ரேவதி விமர்சித்திருந்த நிலையில் தற்போது, மோகன்லாலுடன் சில படங்களில் ஜோடியாக நடித்த நடிகை பத்மபிரியாவும் தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
இதுபற்றி கூறியுள்ள அவர், “இது பெண்களுக்கு எதிரான மோகன்லாலின் மந்தமான அணுகுமுறையைத்தான் காட்டுகிறது. அவர் சொல்வது போல 'மீ டூ'வுக்கு அழிவென்பது கிடையாது. பெண்களுக்காக குரல் கொடுக்க வாயை திறக்காவிட்டாலும் பரவாயில்லை. இதுபோன்ற கருத்துக்களை கூறாமலாவது இருக்கலாமே” என பதிலடி கொடுத்துள்ளார்.