'திரெளபதி 2' படத்தில் பாடியதற்காக மன்னிப்பு கேட்ட சின்மயி | மஞ்சு வாரியரிடம் கமல் வைத்த கோரிக்கை | நகைச்சுவைக்கு நேரமும் இயல்பான வெளிப்பாடும் அவசியம் : ஷ்ரேயா ஷர்மா | ராம்சரண் படத்தின் சண்டைக் காட்சியை படமாக்கும் பாலிவுட் ஹீரோவின் தந்தை | என் மகனை திரையுலகிலிருந்து ஒதுக்க சதி ; பிரித்விராஜின் தாயார் பகீர் குற்றச்சாட்டு | 500 நடன கலைஞர்களுடன் நடைபெற்று வரும் சிரஞ்சீவி, வெங்கடேஷ் பாடல் படப்பிடிப்பு | பாட்டிலை தலையில் உடைத்து போஸ்டருக்கு ரத்த திலகம் இட்ட மகேஷ்பாபு ரசிகர் | ரியோ ராஜ் நடிக்கும் 'ராம் இன் லீலா' | இயக்குனர் ராஜ் நிடிமொருவை 2வது திருமணம் செய்தார் சமந்தா | நடிகை கனகா தந்தையும் இயக்குனருமான தேவதாஸ் காலமானார் |

1979ம் ஆண்டு வெளியான படம் நீயா. கமல்ஹாசன், ஸ்ரீப்ரியா, முத்துராமன், லதா நடித்திருந்தனர். பசி துரை இயக்கினார். இந்த படத்தில் கானகத்தில் காதல் ஜோடிகளாக சுற்றித்திரிந்த இச்சாதாரி வகை பாம்பில், ஆண் பாம்பை கமல் உள்ளிட்ட நண்பர்கள் கொன்று விட பெண் பாம்பான ஸ்ரீப்ரியா அவர்களை பழிவாங்குகிற கதை.
இதில் பாம்பாக இருக்கும் ஸ்ரீப்ரியாவும், அவர் காதலனும் பாடும் "ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணா..." பாடல் இப்போதும் பிரபலம். கண்ணதாசன் எழுதிய அந்தப் பாடலை வாணி ஜெயராமும், எஸ்.பி.பாலசுப்பிரமணியமும் பாடி இருந்தனர். சங்கர் கணேஷ் இசை அமைத்திருந்தார்.
தற்போது, இதன் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. அதில் இந்தப் பாடலை ரீமேக் செய்துள்ளனர். படத்திற்கு ஷமீர் இசை அமைத்துள்ளார். இந்தப் படத்தில் ஜெய், வரலட்சுமி, கேத்ரின் தெரசா நடித்துள்ளனர். வரலட்சுமி பாம்பாக நடித்துள்ளார். நீயா படத்தில் நிஜ பாம்பு நடித்திருக்கும், இதிலும் 20 அடி நீள பாம்பை நடிக்க வைத்திருக்கிறார்கள். சில காட்சிகளில் கிராபிக்ஸ் பாம்பை பயன்படுத்தியிருக்கிறார்கள். எல்.சுரேஷ் என்ற புதுமுகம் இயக்கி உள்ளார். படத்தின் தமிழ்நாட்டு உரிமத்தை ஸ்கிரீன் சீன் மீடியா நிறுவனம் வாங்கியுள்ளது. அடுத்த மாதம் படம் வெளிவருகிறது.




