சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
'அனாயசமாக 600 கோடி ரூபாயை செலவழித்து படம் எடுத்திருக்கின்றனர்; இந்தப் படத்தை அதையும் கடந்து எப்படி விற்கப் போகின்றனரோ?' என '2.0' படத்தைப் பற்றி, நடிகர் ரஜினி கவலைப்பட்டுக் கொண்டு இருந்ததாக திரையுலகில் பேச்சு இருந்தது.
இப்போது படம் விலைப் பேசப்படுவதைக் கண்டு, ரஜினி, மகிழ்ச்சியின் உச்சத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதிலும், தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளின் சேடிலைட் உரிமம் மட்டும் சுமார் 110 கோடி ரூபாய்க்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. இதை பிரபல தொலைக்காட்சி நடத்தும் zee நிறுவனத்தினர்தான், வாங்கி இருக்கின்றனர்.
இதையடுத்து, 'படம் ரிலீசாகி, மிக எளிதாக 600 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து கொடுத்துவிடும்' என, படத் தயாரிப்புக் குழு நம்புகிறது. அதை வைத்தே, ரஜினி சந்தோஷமாகி இருப்பதாகச் சொல்கின்றனர்.
'பிரபலமான இந்தி பட நாயகர்கள் படங்களே இந்த அளவுக்கு விற்பனை ஆனதில்லை' என சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.