ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மொத்த கேரளாவும் சபரிமலை விவகாரத்தில் தகித்துக் கொண்டிருக்கும் நிலையில், நடிகர் பிருத்விராஜ் தரப்பில் இருந்து இப்படி ஒரு அறிவிப்பு வரும் என யாருமே எதிர்பார்க்கவில்லை. ஆம்.. 'ஐயப்பன்' என்கிற படத்தில் பிருத்விராஜ் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார் என்றால், இந்த சமயத்தில் அது மிகப்பெரிய செய்தி தானே. இந்தப்படத்தில் சுவாமி ஐயப்பனாகவே நடிக்க இருக்கிறார் பிருத்விராஜ்.
ஆனால், வழக்கம்போல ஐயப்பன் என்கிற கடவுளையோ அவரது பராக்கிரமங்களையோ புகழும் தெய்வீக படமாக அல்லாமல், ஐயப்பன் என்பவர் சாதாரண மனிதனாக, இளவரசனாக, ஒரு போர் வீரனாக, ஒரு புரட்சியாளனாக வாழ்ந்த கதையைத்தான் இந்தப்படத்தில் சொல்லப் போகிறார்களாம்.
ஆகஸ்ட் சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப்படத்தை பிரபல மலையாள எழுத்தாளரும் கதாசிரியருமான சங்கர் ராமகிருஷ்ணன் என்பவர் இயக்கவுள்ளார். தென்னிந்திய மொழிகள் நான்கு மற்றும் ஹிந்தி என ஐந்து மொழிகளில் இந்தப்படத்தை உருவாக்க இருக்கிறார்களாம். மேலும் ஆங்கிலத்திலும் இந்தப்படத்தை வெளியிடும் எண்ணமும் இருக்கிறதாம்.