ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி நடிகர்களில் முக்கியமானவர் மகேஷ் பாபு. அவர் நடித்த பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகின. அவற்றில் சில படங்கள் தமிழிலும் ரீமேக் செய்யப்பட்டு இங்கும் மாபெரும் வெற்றிப் படங்களாகி உள்ளன.
தமிழில் உள்ள நடிகர்கள் சம்பாதித்த பணத்தில் திருமண மண்டபங்கள் தான் கட்டுவார்கள். ஆனால், தெலுங்கில் உள்ள நடிகர்கள் பல்வேறு தொழில்களில் முதலீடு செய்வார்கள். தெலுங்கு நடிகரான மகேஷ் பாபு, ஐதராபாத்தில் ஹை கிளாஸ் மல்டிபிளக்ஸ் தியேட்டர் ஒன்றை ஆசியன் நிறுவனத்துடன் இணைந்து கட்டியிருக்கிறார். எஎம்பி சினிமாஸ் எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த தியேட்டர் தீபாவளியன்றே திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆமீர்கான் நடித்து தீபாவளியை முன்னிட்டு வெளிவந்த 'தக்ஸ் ஆப் ஹிந்தோஸ்தான்' படத்தை முதலிலி வெளியிட்டு ஆமீர்கானையே தியேட்டர் திறப்பு விழாவுக்கும் அழைக்கலாம் என மகேஷ்பாபு நினைத்திருந்தாராம். ஆனால், ஆமீர்கான் அந்தப்பட பிரமோஷனுக்காக ஐதராபாத் வரவில்லை.
எனவே, அடுத்து ஒரு பெரிய படத்தின் மூலம் தியேட்டரைத் திறக்க மகேஷ்பாபு முடிவு செய்துள்ளாராம். இந்த மாதம் 29ம் தேதி வெளியாக உள்ள ரஜினிகாந்த் நடித்துள்ள '2.0' படம் மூலம் தன் தியேட்டரைத் திறக்க விருப்பப்படுகிறார் மகேஷ் பாபு. முதல் படமே பெரிய படமாக இருக்க வேண்டும் என்பதுதான் மகேஷ் பாபுவின் ஆசை.
நல்ல வேளை அவர் 'தக்ஸ் ஆப் ஹிந்தோஸ்தான்' படத்துடன் தியேட்டரைத் திறக்கவில்லை. இல்லையென்றால் ஒரு தோல்விப் படத்துடன் அவர் தியேட்டர் ஆரம்பமாகியிருக்கும் என்று கோலிவுட்டினர் கிசுகிசுக்கிறார்கள்.