ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பிரபல நடிகர் அர்ஜூன். இவர் மீது நடிகை ஸ்ருதி ஹரிகரன், நிபுணன் என்ற தமிழ் படத்தில் நடித்தபோது அர்ஜூன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் கூறினார். அதோடு பெங்களூரு கப்பன் பார்க் காவல் நிலையத்திலும் புகார் கொடுத்தார். போலீசார் அர்ஜுன் மீது 3 பிரிவுகளில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதுதவிர அர்ஜுன், நடிகை ஸ்ருதி ஹரிகரன் மீது மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார். இரு வழக்கிலும் ஜெயிப்பதற்காக காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் கோவிலுக்கு நேற்று குடும்பத்துடன் சென்று வழிபட்டார்.
இந்த கோவிலில் வழிப்பட்டால் தீராத வழக்குகளும் தீர்ந்து நிம்மதி கிடைக்கும் என்பது ஐதீகம். நேற்று காலை 9 மணிக்கு கோவிலுக்கு வந்த அர்ஜூன், கோவிலில் பொதுமக்களுடன் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து சிறப்பு வழிபாடு செய்துவிட்டுச் சென்றார்.