ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கடந்த தீபாவளி அன்று வெளிவந்திருக்க வேண்டிய படம் விஜய் ஆண்டனி நடித்த திமிரு புடிச்சவன். ஆனால் அன்று வெளியான சர்கார் படம் பெரும்பாலான தியேட்டர்களை ஆக்கிரமித்துக் கொண்டதால் படத்தை வெளியிடவில்லை. திமிரு புடிச்சவன் படத்தை 16ந் தேதி வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதற்கு அந்த தேதியில் வெளிவருவதாக அறிவித்திருந்த செய், உத்தரவு மகாராஜா, காற்றின்மொழி, சித்திரம் பேசுதடி 2 படங்களின் தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். அவர்கள், திமிரு புடிச்சவன் 16ந் தேதி வெளிவருதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். இந்த நிலையில் மேற்கண்ட 4 படங்கள் மட்டுமே 16ம் தேதி வெளிவரும் என்று தயாரிப்பாளர் சங்கம் அறிவித்தது. இந்த நிலையில் திமிரு புடிச்சவன் படத்தின் தயாரிப்பாளரும், விஜய் ஆண்டனியின் மனைவியுமான பாத்திமா விஜய் ஆண்டனி தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
தமிழகம் முழுவதும் 800 திரையரங்குகளில் 'சர்கார்' திரைப்படம் திரையிடப்பட்டதால், எங்களுக்கு தியேட்டர் கிடைக்கவில்லை. விநியோகஸ்தர்கள் ரிலீஸ் தேதியை தவறவிட்டது அதிர்ச்சியாக இருந்தது. படத்தை தயாரிப்பாளர்கள் சங்கம் உறுதியளித்தாலும், திரையரங்குகள் முறைப்படுத்துவதில் சிக்கல் இருக்கும் போது திரையரங்குகளை எப்படிப் பெறுவது?
இவ்வாறு பாத்திமா விஜய் ஆண்டனி தெரிவித்திருக்கிறார்.