ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தயாரிப்பாளர் சங்க புதிய விதிகளின் படி ஒவ்வொரு மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையும், 3வது வெள்ளிக் கிழமையும் சிறு பட்ஜெட் படங்கள் மட்டுமே வெளிவரும் என்பதாகும். அதன்படி வருகிற 16ந் தேதி உதயா நடித்து, தயாரித்துள்ள உத்தரவு மகாராஜா, நகுல் நடித்துள்ள செய், ஜோதிகா நடித்துள்ள காற்றின்மொழி, மற்றும் சித்திரம் பேசுதடி 2ம் பாகம் ஆகிய படங்கள் வெளிவர தயாரிப்பாளர் சங்கம் அனுமதி கடிதம் கொடுத்திருக்கிறது.
இந்த நிலையில் தீபாவளிக்கு வெளிவருவதாக அறிவித்திருந்த விஜய் ஆண்டனி நடித்துள்ள திமிருபுடிச்சவன் படம் அன்று வெளிவரவில்லை. அதனால் வருகிற 16ந் தேதி வெளிவரும் என்று விஜய் ஆண்டனி விளம்பரம் செய்திருந்தார். இதனால் செய் மற்றும், உத்தரவு மகாராஜா படங்கள் வெளியாகும் தியேட்டர்கள் குறைக்கப்படுகிறது என்ற செய்திகள் வெளியானது. இதனால் தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில் தயாரிப்பாளர் சங்கம் நேற்று விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் "உத்தரவு மகாராஜா, செய், சித்திரம் பேசுதடி 2, காற்றின் மொழி படங்கள் வெளியாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் படங்கள்தவிர வேறு படங்களுக்கு சங்கம் அனுமதி வழங்கவில்லை. சிறிய படங்களுக்காக ஒதுக்கப்பட்ட இந்த தேதியில் அனுமதி பெறாத படங்கள் வந்து மேற்படி படங்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும் உறுப்பினர்கள் மீது சங்கவிதிப்படி, உறுதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுககப் படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.