ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சென்னையில் உள்ள தனியார் கால்டாக்சி நிறுவனத்தில் வேலை செய்து வந்தவர் மணிகண்டன் 28. தீபாவளிக்காக வேலூர் மாவட்டத்தில் உள்ள தனது சொந்த ஊரான காவேரிப்பாக்கத்திற்கு சென்றிருக்கிறார்.
இந்நிலையில், நேற்று சர்கார் படம் வெளியானதால் விஜய் ரசிகர்கள், அந்த பகுதிகளில் சர்கார் படத்தின் பேனர்களை வைத்துள்ளனர். இதில் அவர் வீடு அருகேயும் பேனர் வைக்கப்பட்டுள்ளது. பேனர்களை மணிகண்டன் கிழித்துள்ளார். இதனால் விஜய் ரசிகர்கள் அவரை தாக்கியுள்ளனர்.
அதையடுத்து, மணிகண்டனின் உறவினர்கள் அவரை விஜய் ரசிகர்களிடமிருந்து மீட்டு ஒரு அறையில் அடைத்து வைத்துள்ளனர். சற்றுநேரத்தில் அந்த அறைக்குள் மணிகண்டன் தூக்கில் தொங்கியபடி இருந்தார்.
இதையடுத்து அவரது உடம்பை கைப்பற்றிய போலீசார், மணிகண்டன் தானாக தூக்கில் தொங்கினாரா? இல்லை கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டாரா? என்று தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.