ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகர் அர்ஜுன் மீது நடிகை ஸ்ருதி ஹரிகரன், நிபுணன் படத்தில் நடித்தபோது தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளித்தார். அந்த புகாரை மறுத்த அர்ஜுன், ஸ்ருதி ஹரிகரன் மீது மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார்.
ஸ்ருதியும் பாலியல் தொல்லை கொடுத்தற்காக ஆதாரங்களை கொடுத்து பெங்களூரு கப்பன் பார்க் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் 3 பிரிவுகளில் அர்ஜுன் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். அதோடு அர்ஜுன் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி விசாணைக்கு உட்பட வேண்டும் என்று சம்மன் அனுப்பினர்.
அதன்படி, அர்ஜுன் கப்பன் பார்க் காவல் நிலையத்தில் ஆஜரானார். அவருடன் அவரது வக்கில்கள் சிலரும் வந்திருந்தனர். ஆனால் வக்கில்களை போலீசார் விசாரணை அறைக்குள் அனுமதிக்கவில்லை. அர்ஜுன் அவர்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற வாதாடினார். "உங்களை எந்த வகையிலும் துன்புறுத்த மாட்டோம். இந்த விசாரணை உங்கள் தரப்பு பதில் என்ன என்பதை பதிவு செய்வது தான்" என்று இன்ஸ்பெக்டர் அய்யணா ரெட்டி கூறியதை தொடர்ந்து அர்ஜுன் விசாரணை அறைக்குள் சென்றார்.
விசாரணையின்போது பெண் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ரேணுகா உடன் இருந்தார். ஸ்ருதி ஹரிகரன் கொடுத்த புகாரை அர்ஜுனிடம் படிக்க கொடுத்தனர். அதை படித்து பார்த்துவிட்டு. அந்த புகாரை மறுத்து தனது வாக்குமூலத்தை அர்ஜுன் அளித்தார். பின்னர் போலீசார் கேட்ட கேள்விகளுக்கும் பதில் அளித்தார்.
"சினிமாவில் காதல் காட்சிகளின் போது யதார்த்தமாக காட்சி அமைய வேண்டும் என்பதற்காக கட்டிப்பிடித்து அணைப்பது சகஜமான ஒன்று. இயக்குனர் சொல்வதை ஒரு நடிகன் என்ற முறையில் நான் செய்ய வேண்டும். அன்று ஒத்துழைப்பு கொடுத்த ஸ்ருதி, இன்று அதை பாலியல் தொல்லை என்று புகார் கொடுத்திருக்கிறார்" என்று அர்ஜுன் கூறியதாக தெரிகிறது.
இந்த விசாரணை 2 மணி நேரம் நடந்தது. அர்ஜுனின் விளக்கத்தையும், பதிலையும் பதிவு செய்து கொண்ட போலீசார். எப்போது அழைத்தாலும் போலீஸ் நிலையம் வர வேண்டும் என்ற நிபந்தனையுடன் அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் ஸ்ருதி ஹரிகரன் ஆஜராக போலீசார் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.