ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு சென்று வழிபடலாம் என உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை தொடர்ந்து, பலரும் இதற்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் கருத்துக்களை கூறி வருகின்றனர். இந்தநிலையில் நடிகர் பிரகாஷ்ராஜ் பெண்களை அனுமதிக்க மறுக்கும் கடவுள் எனக்கும் வேண்டாம் என கூறியுள்ளார்.
சமீபத்தில் ஷார்ஜாவில் நடைபெற்ற புத்தக திருவிழாவில் கலந்துகொண்ட பிரகாஷ்ராஜ், அங்கே நடைபெற்ற கூட்டத்தில் பேசியபோது, “நாம் எல்லோரும் பெண்களின் வயிற்றில் இருந்து தான் பிறந்தோம். என் தாய்க்கு வழிபாடு மறுக்கும் மதம் மதமே அல்ல.. கடவுளை வழிபடக்கூட நிபந்தனைகள் விதிக்கும் பக்தர்கள் உண்மையான பக்தர்களே அல்ல.. அதேபோல என் தாயை கோவிலுக்குள் நுழைய வேண்டாம் என தடுக்கும் கடவுளும் உண்மையான கடவுள் அல்ல, அது எனது கடவுளும் இல்லை” என கூறியுள்ளார்.