ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஜெயம்ரவி தற்போது நடித்து வரும் படம் அடங்க மறு. ராஷி கண்ணா ஹீரோயின். இவர்கள் தவிர சுப்பு பஞ்சு, அழகம் பெருமாள், கஞ்சா கருப்பு, முனீஷ்காந்த் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். சாம் சி.எஸ் இசை அமைக்கிறார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்கிறார். ஜெயம் ரவியின் மாமியார் சுஜாதா விஜயகுமார் தயாரிக்கிறார். படத்தின் பணிகள் இறுதிகட்டத்தை நெருங்கி உள்ளது. படம் பற்றி இயக்குனர் கார்த்திக் தங்கவேல் கூறியதாவது:
இது போலீஸ் பின்னணியில் நடக்கும் க்ரைம் த்ரில்லர் படம். ஜெயம் ரவி இதற்கு முன் தனி ஒருவன், போகன் படங்களில் போலீசாக நடித்திருந்தாலும் இந்தப் படம் அதிலிருந்து மாறுபட்டு இருக்கும். போலீஸ் துறைக்குள் இருக்கும் அரசியல் இதில் தெளிவாக பேசப்படுகிறது. புதிதாக ஐபிஎஸ் முடித்து விட்டு செல்லும் இளம் அதிகாரிகள் எப்படி நடத்தப்படுகிறார்கள். நல்லது செய்ய நினைக்கும் அவர்கள் எப்படி தடுக்கப்படுகிறார்கள் என்பதை பற்றி டீட்டெய்லாக படம் பேசும்.
அதற்காக இது போலீஸ் படம் இல்லை. டில்லி நிர்பயா, அயனாவரத்து சிறுமி போன்றோர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டதை போன்ற ஒரு சம்பவத்தை மையமாக கொண்டு கதை நகரும். என்கிறார்.