விளம்பர படப்பிடிப்பின் போது ஜூனியர் என்டிஆருக்கு காயம்! | விடைப்பெற்றார் ரோபோ சங்கர்; கண்ணீர் மல்க திரையுலகினர், ரசிகர்கள் பிரியாவிடை | 'டிரெயின்' படத்திற்காக களத்தில் இறங்கிய தாணு! | 'ஓ.ஜி' படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | 'மகுடம்' படத்தில் துஷாரா விஜயன் சம்மந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவு! | லோகேஷ் அழைத்தால் கண்ணை மூடிக்கொண்டு நடிப்பேன் : அர்ஜுன் தாஸ் | காந்தாரா சாப்டர் 1க்கு டப்பிங் பேசிய ருக்மணி வசந்த் : செப்., 22ல் டிரைலர் ரிலீஸ் | ரூ.100 கோடி வசூலித்த சிவகார்த்திகேயனின் மதராஸி | சென்னையில் மழை : படகு சவாரி கேட்ட பூஜா ஹெக்டே | பேரனுக்கு நாளை(செப்.,19) காது குத்து விழா வைத்திருந்த நிலையில் ரோபோ சங்கர் மரணம் |
2.0 டிரைலர் வெளியீட்டு விழாவில் நடிகர் அக்சய் குமார் பேசியதாவது : தமிழில் பேச 2 முதல் 3 மணிநேரம் வரை பயிற்சி எடுத்தேன். தமிழில் பேசுகிறேன், உச்சரிப்பு தவறாக இருந்தால் மன்னித்து கொள்ளுங்கள். வணக்கம் சென்னை, மகிழ்ச்சி. ரஜினி, ஷங்கர், ரஹ்மான் உடன் 2.0 படம் பண்ணியதை பெருமையாக கருதுகிறேன். தமிழக மக்களின் அன்பிற்கும் ஆதரவுக்கும் நன்றி.
அக்சய் குமாரிடம் விஷால், உடலை பிட்டாக வைத்திருப்பது கேட்டார். இதற்கு பதிலளித்த அக்சய், நான் தினமும் காலை 4 மணிக்கே எழுந்து விடுவேன். ஜிம் போவேன், நான் சொந்தமாக ஜிம் வைத்துள்ளேன். சின்ன வயதிலிருந்து தொடருகிறேன். என் குடும்பத்தார் யாரும் கட்டாயப்படுத்தி இதை செய்யவில்லை, நானே மகிழ்வுடன் செய்கிறேன்.
விஷால், அரிசி தொடர்பான உணவுகள் உண்ணவில்லை என்று கேள்விப்பட்டேன். உங்கள் அம்மாவை மகிழ்விக்க வாரம் ஒருமுறையாவது அவர் சமைத்து தரும் இட்லி, தோசையை உண்ணுவுங்கள். அவருக்கும் மகிழ்ச்சியை தரும். என் உடல் தான் எனது கோவில்.
இப்படத்திற்காக நிறைய சவால்களை சந்தித்தேன். நிறைய கற்றுக் கொண்டேன். ஷங்கர் ஒரு ஜீனியஸ். என் ஒட்டுமொத்த திரை வாழ்வில் போட்ட மேக்கப்பை இந்த ஒரு படத்திற்காக போட்டுள்ளேன். படத்தில் நடிக்கும்போது நிறைய வலிகள் இருந்தாலும், திரையில் பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது.
இவ்வாறு அக்சய் குமார் பேசினார்.