மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
2.0 டிரைலர் வெளியீட்டு விழாவில் நடிகர் அக்சய் குமார் பேசியதாவது : தமிழில் பேச 2 முதல் 3 மணிநேரம் வரை பயிற்சி எடுத்தேன். தமிழில் பேசுகிறேன், உச்சரிப்பு தவறாக இருந்தால் மன்னித்து கொள்ளுங்கள். வணக்கம் சென்னை, மகிழ்ச்சி. ரஜினி, ஷங்கர், ரஹ்மான் உடன் 2.0 படம் பண்ணியதை பெருமையாக கருதுகிறேன். தமிழக மக்களின் அன்பிற்கும் ஆதரவுக்கும் நன்றி.
அக்சய் குமாரிடம் விஷால், உடலை பிட்டாக வைத்திருப்பது கேட்டார். இதற்கு பதிலளித்த அக்சய், நான் தினமும் காலை 4 மணிக்கே எழுந்து விடுவேன். ஜிம் போவேன், நான் சொந்தமாக ஜிம் வைத்துள்ளேன். சின்ன வயதிலிருந்து தொடருகிறேன். என் குடும்பத்தார் யாரும் கட்டாயப்படுத்தி இதை செய்யவில்லை, நானே மகிழ்வுடன் செய்கிறேன்.
விஷால், அரிசி தொடர்பான உணவுகள் உண்ணவில்லை என்று கேள்விப்பட்டேன். உங்கள் அம்மாவை மகிழ்விக்க வாரம் ஒருமுறையாவது அவர் சமைத்து தரும் இட்லி, தோசையை உண்ணுவுங்கள். அவருக்கும் மகிழ்ச்சியை தரும். என் உடல் தான் எனது கோவில்.
இப்படத்திற்காக நிறைய சவால்களை சந்தித்தேன். நிறைய கற்றுக் கொண்டேன். ஷங்கர் ஒரு ஜீனியஸ். என் ஒட்டுமொத்த திரை வாழ்வில் போட்ட மேக்கப்பை இந்த ஒரு படத்திற்காக போட்டுள்ளேன். படத்தில் நடிக்கும்போது நிறைய வலிகள் இருந்தாலும், திரையில் பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது.
இவ்வாறு அக்சய் குமார் பேசினார்.