'ரேஸ் நடிப்பு அல்ல.. ரியல்' : அஜித்தின் புதிய வீடியோ வைரல் | ஹிந்தியில் திரிஷ்யம் 3 ரிலீஸ் தேதியை அறிவித்த அஜய் தேவ்கன் | முதல் படம் வெளியாகும் முன்பே சிறை இயக்குனருக்கு கார் பரிசு | நடிகர் மாதவன் பெயர், புகைப்படத்தை அனுமதியின்றி பயன்படுத்த தடை | போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஷைன் டாம் சாக்கோ விடுவிப்பு | துபாய் பயணத்தை ரத்து செய்துவிட்டு நடிகர் சீனிவாசனுக்கு அஞ்சலி செலுத்திய பார்த்திபன் | அவதார் அடுத்த பாகம் பற்றி இப்ப கேட்காதீங்க : ஜேம்ஸ் கேமரூன் | சிவகார்த்திகேயன் தயாரிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வீடியோ வெளியானது! | பொங்கல் வெளியீட்டில் அனல் பறக்குமா : ஜனநாயகன், பராசக்தி விழாவில் பேசுவார்களா? | தமன்னாவின் 36வது பிறந்தநாள் பார்ட்டியில் பங்கேற்ற மிருணாள் தாக்கூர்! |

2.0 டிரைலர் வெளியீட்டு விழாவில் நடிகர் அக்சய் குமார் பேசியதாவது : தமிழில் பேச 2 முதல் 3 மணிநேரம் வரை பயிற்சி எடுத்தேன். தமிழில் பேசுகிறேன், உச்சரிப்பு தவறாக இருந்தால் மன்னித்து கொள்ளுங்கள். வணக்கம் சென்னை, மகிழ்ச்சி. ரஜினி, ஷங்கர், ரஹ்மான் உடன் 2.0 படம் பண்ணியதை பெருமையாக கருதுகிறேன். தமிழக மக்களின் அன்பிற்கும் ஆதரவுக்கும் நன்றி.
அக்சய் குமாரிடம் விஷால், உடலை பிட்டாக வைத்திருப்பது கேட்டார். இதற்கு பதிலளித்த அக்சய், நான் தினமும் காலை 4 மணிக்கே எழுந்து விடுவேன். ஜிம் போவேன், நான் சொந்தமாக ஜிம் வைத்துள்ளேன். சின்ன வயதிலிருந்து தொடருகிறேன். என் குடும்பத்தார் யாரும் கட்டாயப்படுத்தி இதை செய்யவில்லை, நானே மகிழ்வுடன் செய்கிறேன்.
விஷால், அரிசி தொடர்பான உணவுகள் உண்ணவில்லை என்று கேள்விப்பட்டேன். உங்கள் அம்மாவை மகிழ்விக்க வாரம் ஒருமுறையாவது அவர் சமைத்து தரும் இட்லி, தோசையை உண்ணுவுங்கள். அவருக்கும் மகிழ்ச்சியை தரும். என் உடல் தான் எனது கோவில்.
இப்படத்திற்காக நிறைய சவால்களை சந்தித்தேன். நிறைய கற்றுக் கொண்டேன். ஷங்கர் ஒரு ஜீனியஸ். என் ஒட்டுமொத்த திரை வாழ்வில் போட்ட மேக்கப்பை இந்த ஒரு படத்திற்காக போட்டுள்ளேன். படத்தில் நடிக்கும்போது நிறைய வலிகள் இருந்தாலும், திரையில் பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது.
இவ்வாறு அக்சய் குமார் பேசினார்.