புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு | எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‛ராமாயணா' : அறிமுக வீடியோ வெளியீடு | மார்கோ 2 நிச்சயம் உருவாகும் : உன்னி முகுந்தன் விலகிய பிறகும் உறுதியாக நிற்கும் தயாரிப்பாளர் |
2.0 டிரைலர் வெளியீட்டு விழாவில் நடிகர் அக்சய் குமார் பேசியதாவது : தமிழில் பேச 2 முதல் 3 மணிநேரம் வரை பயிற்சி எடுத்தேன். தமிழில் பேசுகிறேன், உச்சரிப்பு தவறாக இருந்தால் மன்னித்து கொள்ளுங்கள். வணக்கம் சென்னை, மகிழ்ச்சி. ரஜினி, ஷங்கர், ரஹ்மான் உடன் 2.0 படம் பண்ணியதை பெருமையாக கருதுகிறேன். தமிழக மக்களின் அன்பிற்கும் ஆதரவுக்கும் நன்றி.
அக்சய் குமாரிடம் விஷால், உடலை பிட்டாக வைத்திருப்பது கேட்டார். இதற்கு பதிலளித்த அக்சய், நான் தினமும் காலை 4 மணிக்கே எழுந்து விடுவேன். ஜிம் போவேன், நான் சொந்தமாக ஜிம் வைத்துள்ளேன். சின்ன வயதிலிருந்து தொடருகிறேன். என் குடும்பத்தார் யாரும் கட்டாயப்படுத்தி இதை செய்யவில்லை, நானே மகிழ்வுடன் செய்கிறேன்.
விஷால், அரிசி தொடர்பான உணவுகள் உண்ணவில்லை என்று கேள்விப்பட்டேன். உங்கள் அம்மாவை மகிழ்விக்க வாரம் ஒருமுறையாவது அவர் சமைத்து தரும் இட்லி, தோசையை உண்ணுவுங்கள். அவருக்கும் மகிழ்ச்சியை தரும். என் உடல் தான் எனது கோவில்.
இப்படத்திற்காக நிறைய சவால்களை சந்தித்தேன். நிறைய கற்றுக் கொண்டேன். ஷங்கர் ஒரு ஜீனியஸ். என் ஒட்டுமொத்த திரை வாழ்வில் போட்ட மேக்கப்பை இந்த ஒரு படத்திற்காக போட்டுள்ளேன். படத்தில் நடிக்கும்போது நிறைய வலிகள் இருந்தாலும், திரையில் பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது.
இவ்வாறு அக்சய் குமார் பேசினார்.