ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ் திரையுலக பெண்களின் பாதுகாப்புக்கு, விசாகா கமிட்டி அடிப்படையில், குழு அமைக்க, நடிகர் சங்க அவசர செயற்குழுவில், முடிவு செய்யப்பட்டுள்ளது.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம், சென்னையில், நேற்று நடந்தது. இதில், மீ டூ விவகாரம் குறித்தும், பெண்களுக்கான பாதுகாப்பு குறித்தும் விவாதிக்கப்பட்டது. கூட்ட முடிவில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்து, தலைவர் நாசர் கூறியதாவது :
நடிகர் சங்கத்தினரின் சுயமரியாதை, உரிமைகளை காப்பாற்றும் வகையில், ஏற்கனவே தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சட்டங்கள் உள்ளன. இருப்பினும், நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, விசாகா கமிட்டி அடிப்படையில், குழு அமைக்கப்படும். அக்குழுவில், பெரும்பான்மையாக மகளிர் இடம் பெறுவர். அத்துடன், உளவியல் ரீதியான பிரச்னைகளை அலசி ஆராய்ந்து, அறிக்கை சமர்ப்பிக்க, மனநல மருத்துவர் ஒருவரும் இடம் பெறுவார். இக்குழு, ஆண், பெண் வேறுபாடின்றி, பிரச்னைகளை பொதுவாக அணுகும். படப்பிடிப்பு தளங்களில், அனைத்து தொழிலாளர்களை பாதுகாக்கவும், சுயமரியாதைக்காகவும், ஒரு குழு அமைக்க தயாரிப்பாளர் சங்கத்திற்கு பரிந்துரை செய்யப்படும்.
இவ்வாறு, நாசர் கூறினார்.