ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
100 படங்களுக்கு மேல் டப்பிங் பேசியவர் ரவீணா ரவி. த்ரிஷா, சமந்தா, ஹன்சிகா, நயன்தாரா உள்ளிட்ட பிரபல நடிகைகளுக்கு குரல் கொடுத்துள்ளார். கடந்த ஆண்டு ஒரு கிடாயின் கருணை மனு படத்தில் விதார்த் ஜோடியாக நடித்திருந்தார். படத்தில் அவரது நடிப்பு பேசப்பட்டாலும் அதன் பிறகு பெரிய வாய்ப்புகள் வரவில்லை. அதன் பிறகு மீண்டும் டப்பிங் பேச சென்று விட்டார்.
கடைசியாக 2.0 படத்திற்கு எமிக்கு டப்பிங் பேசிய கையோடு, காவல் துறை உங்கள் நண்பன் என்ற படத்தில் நடிக்க வந்து விட்டார். இதில் சுரேஷ் ரவி ஹீரோவாக நடிக்கிறார். இவர்கள் தவிர மைம் கோபி, கல்லூரி வினோத், உள்பட பலர் நடிக்கிறார்கள். ஆதித்ய சூர்யா இசை அமைக்கிறார், விஷ்ணுஸ்ரீ ஒளிப்பதிவு செய்கிறார். ஆர்.டி.எம் என்ற புதுமுகம் இயக்குகிறார். படத்தில் நடிப்பது பற்றி ரவீணா ரவி கூறியதாவது:
என் முதல் படமான ஒரு கிடாயின் கருணை மனு படத்தில் நான் நடித்த கதாபாத்திரத்தில் இருந்து இது முற்றிலும் மாறுபட்டது. கதாநாயகனின் மனைவியாக, வேலைக்கு போகும் ஒரு பெண் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். என் வாழ்வில் நடக்கும் அதிர்ச்சிகரமான சம்பவம் வாழ்க்கையின் போக்கை மாற்றுகிறது. உண்மையாக என் வாழ்க்கையில் அத்தகைய சூழ்நிலைகளை நான் எதிர்கொண்டதில்லை. அதனால் நடிப்பு பயிற்சி மூலம் என்னை தயார் செய்ய வேண்டியிருந்தது. என்றார் ரவீணா.