ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தற்போது பெண்கள் மீ டூ மூலம் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகள் பற்றி வெளியிட்டு வருகிறார்கள். தமிழ்நாட்டில் பாடலாசிரியர் வைரமுத்து, நடிகர்கள் அர்ஜுன், தியாகராஜன், ராதாரவி, இயக்குனர் சுசி கணேசன் ஆகியோர் குற்றச்சாட்டில் சிக்கி உள்ளனர். பாலியல் குற்றச்சாட்டு கூறும் பெண்களுக்கு ஆதரவாக பிரகாஷ்ராஜ், சித்தார்த் உள்ளிட்ட ஒரு சில நடிகர்களே இருக்கிறார்கள்.
பிரகாஷ்ராஜ், ஸ்ருதி ஹரிகரன் புகாரின் பேரில் நடிகர் அர்ஜூன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதற்கு கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சில திரைபிரபலங்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இது குறித்து பிரகாஷ்ராஜ் தனது பேஸ்புக்கில் தெரிவித்திருப்பதாவது:
திரைப்படத்துறையில் பல பெண்களுக்கு பாலியல் ரீதியான அநீதி இழைக்கப்படுவது அனைவருக்கும் தெரியும். இதுகுறித்து அவர்கள் புகார் எழுப்பினால் அவர்களை நோக்கியே அனைவரும் கேள்வி எழுப்புகிறார்கள். இந்த விஷயத்தில் அனைவரும் ஒற்றுமையாக செயல்படுகிறார்கள். குற்றம்சாட்டும் பெண்களின் வாயை அடைக்கும் வகையில் பேசுகிறார்கள். யாருடைய தூண்டுதலின் பேரில் புகார் செய்கிறாய். அரசியல் பின்னணி உள்ளதா? என்று கேள்வி கேட்கிறார்கள். இது அவர்கள் மேற்கொண்டு பேசாமல் வாயை அடைக்கும் முயற்சி.
அர்ஜுன் மீது ஸ்ருதிஹரிகரன் புகார் அளித்துள்ளார். அனைவரும் ஸ்ருதிக்கு எதிரான கருத்துக்களைத்தான் சொல்கிறார்கள். நான்தான் அர்ஜுன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றேன். இது குறித்து முறையான விசாரணை வேண்டும்.
இவ்வாறு பிரகாஷ்ராஜ் எழுதியுள்ளார்.