ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழில் நிபுணன் என்ற படத்தில் நடித்தபோது அர்ஜுன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கன்னட நடிகை ஸ்ருதி ஹரிஹரன் பரபரப்பு பாலியல் புகார் கூறினார். இது பொய்யான குற்றச்சாட்டு, இதற்கு பின்னணியில் யாரோ இருக்கிறார்கள். ஸ்ருதி மீது வழக்கு தொடர்வேன் என்று அர்ஜுன் அறிவித்தார்.
இந்த நிலையில் அர்ஜுன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததற்கான ஆதாரம் என்னிடம் இருக்கிறது. வழக்கு தொடுத்தால் அதை சந்திப்பேன் என்று ஸ்ருதி ஹரிஹரன் கூறியுள்ளார். பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த ஸ்ருதி ஹரிஹரன் கூறியதாவது:
அர்ஜுன் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தது 100 சதவிகிதம் உண்மை. அப்போது தைரியமாக என்னால் வெளியில் சொல்ல முடியவில்லை. எதிர்காலம் பாதிக்கப்படுமோ என்ற பயம் இருந்தது. இப்போது பல பெண்கள் அமைப்பினர் எனக்கு பாதுகாப்பு தர முன் வந்துள்ளனர். அதனால் வெளிப்படையாக பேசுகிறேன். பெரிய நடிகர்களுடன் நடித்திருக்கிறேன். யாரும் எனக்கு தொந்தரவு தரவில்லை. ஆனால் அர்ஜுனுடன் நடித்தபோது தான் எனக்கு மோசமான அனுபவங்கள் ஏற்பட்டது.
நான் விளம்பரத்திற்காக இதை செய்யவில்லை. அன்று நடந்த பாலியல் தொல்லைக்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது. அவர் என் மீது வழக்கு தொடர்ந்தால் சந்திப்பேன். நானும் அவர் மீது சட்டப்படி நடிவடிக்கை எடுப்பேன். என்னிடம் உள்ள ஆதாரத்தை இப்போது வெளியிட மாட்டேன். வெளியிட்டால் அதை அழிக்க முயற்சிப்பார்கள். நேரம் வரும்போது வெளியிடுவேன். தேவைப்பட்டால் நீதிமன்றத்திடம் கொடுப்பேன். என்றார்.