ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தெலுங்குத் திரையுலகத்தின் பிரபலமான இயக்குனர்களில் ஒருவரான ராம்கோபால் வர்மா, சர்ச்சைக்குரிய பல தெலுங்கு, ஹிந்திப் படங்களை இயக்கியிருக்கிறார். இவர் அடுத்து இயக்க உள்ள படம் 'லட்சுமியின் என்டிஆர்'.
ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும் நடிகருமான என்டிஆரின் வாழ்க்கை வரலாற்றை அவருடைய வாழ்க்கையில் லட்சுமி பார்வதி நுழைந்த பிறகு உள்ளதை படமாகக் கொடுக்க உள்ளார். இந்தப்படத்தில் எந்த அரசியல் பின்னணியும் இருக்காது என ராம்கோபால் வர்மா அறிவித்துள்ளார்.
நாத்திகவாதியான ராம்கோபால் வர்மா இந்தப் படத்திற்காக இன்று முதல் முறையாக திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வந்து வணங்கி படத்தை ஆரம்பித்துள்ளார். அவருடன் என்டிஆரின் மனைவியான லட்சுமி பார்வதியும் வந்திருந்தார்.
இந்தப்படம் பற்றி லட்சுமி பார்வதி கூறுகையில், “இந்த பயோபிக் படம் சிறப்பாக எடுக்கப்படும் என நினைக்கிறேன். வரும் தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்காக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவேன். தேர்தலில் நிற்க வேண்டும் என்ற எண்ணமில்லை,” என்று தெரிவித்துள்ளார்.
என்டிஆரின் வாழ்க்கை வரலாற்றை அவருடைய மகன் பாலகிருஷ்ணா 'என்டிஆர்' என்ற பெயரில் ஏற்கெனவே உருவாக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.