ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
விரும்மாண்டி, எம் மகன், சண்டக்கோழி, சிவப்பதிகாரம், பைரவா, மாரி உள்ளிட்ட ஏராளமான படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்ர வேடங்களில் நடித்தவர் நடிகர் சண்முகராஜன். தற்போது முன்னணி சேனல் ஒன்றில் ஒளிப்பரப்பாகி வரும் நந்தினி என்கிற சீரியலில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், இவர் மீது இதே சீரியலில் நடிக்கும் நடிகை ராணி, சென்னை, செங்குன்றம் போலீசில் சண்முகராஜன் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் அளித்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராணி, சண்முகராஜன், தன்னை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்கிறார். என் உடலில் அங்கும், இங்கும் தொடுகிறார். தனியாக அவரது ரூமிற்கு வரும்படி கூறுகிறார். இதற்கு நான் மறுக்கவே, என்னை தாக்கினார். இதை என் கணவர் தட்டி கேட்டபோது அவரையும் அடிக்க பாய்ந்தார் என்றார்.
இதுகுறித்து செங்குன்றம் போலீசார் விசாரித்து வரும் வேளையில், நடிகர் சண்முகராஜன், செங்குன்றம் போலீசில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
இதனிடையே இந்த விவகாரத்தில் சண்முகராஜன், ராணியிடம் மன்னிப்பு கேட்டார். இருவருக்கும் இடையே சமரசம் ஏற்பட்டது. இதனால் ராணி, புகாரை வாபஸ் பெற்றார்.