ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மலையாள பெண்கள் சினிமா சங்கம் சார்பில் நேற்று முன்தினம் திருவனந்தபுரத்தில் நடிகை ரேவதி, பத்மப்ரியா, ரீமா கல்லிங்கல், ரம்யா நம்பீசன் ஆகியோர் பேட்டி அளித்தனர். அப்போது பேசிய ரேவதி "கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 17 வயதே ஆன இளம் நடிகை என் வீட்டு கதவை தட்டினார். அக்கா என்னை காப்பாற்றுங்கள் என்று கதறி அழுதார்" என்று கூறினார்.
அந்த 17 வயது நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்தது யார் என்பது ரேவதிக்கு தெரியும். அவர் ஏன் அதை மறைத்தார் என்று கொச்சியை சேர்ந்த சியாஸ் ஜமால் என்பவர் எர்ணாகுளம் மத்திய போலீசில் புகார் அளித்துள்ளார். அவர் போலீசிடம் கொடுத்துள்ள புகார் மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:
சில வருடங்களுக்கு முன்பு 17 வயது நடிகையை யாரோ பலாத்காரம் செய்ய முயற்சித்திருக்கிறார்கள். அந்த நடிகை ரேவதியிடம் அடைக்கலம் கேட்டிருக்கிறார். அந்த நடிகை நிச்சயம் அந்த குற்றவாளி பற்றி ரேவதியிடம் கூறியிருப்பார். ஆனால் அதை அவர் மறைத்து விட்டார். எனவே போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று கூறியிருந்தார்.
இதுகுறித்து ரேவதி கூறும்போது "கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 17 வயது நடிகை என் வீட்டு கதவை தட்டி காப்பாற்றச் சொன்னது உண்மைதான். ஆனால் அந்த பெண்ணுக்கு பலாத்கார முயற்சி நடந்ததாக நான் கூறவில்லை. அந்த பெண்ணின் வீட்டு கதவை யாரோ தட்டியதால் பயந்து என் வீட்டுக்கு அவர் பாட்டியுடன் வந்தார். அன்று இரவு முழுவதும் நாங்கள் மூவரும் தூங்காமல் இருந்தோம். பெண்களுக்கு பாதுகாப்பு அவசியம் என்பதை வற்புறுத்தவே அந்த சம்பவத்தை சொன்னேன்" என்கிறார்.