ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
'மீ டூ' விவகாரம் தமிழ்த் திரையுலகத்தை பலமாக உலுக்கிக் கொண்டிருக்கிறது. வைரமுத்து மீது சின்மயி தொடர்ந்து அடுக்கடுக்கான பாலியல் குற்றச்சாட்டுக்களைக் கூறிக் கொண்டிருக்கிறார். அவருக்கு ஆதரவாக திரையுலகத்தில் ஒரு சிலர் குரல் எழுப்பி வருகிறார்கள். இந்த விவகாரத்தில் உண்மை என்ன என்பது வெளியில் வர வேண்டும் என்றும் பலர் கூறி வருகிறார்கள்.
இதனிடையே, நடிகர் சித்தார்த் இந்த 'மீ டூ' குறித்து அவருடைய கருத்துக்களைப் பதிவிட்டுள்ளார். அதில், “கடலில் மீன் ஒன்று அழுதா, கரைக்கு செய்தி வந்து சேருமோ..?, மீ டூவுக்காக மேலும் ஒரு நாள் அமைதி. தமிழ் சினிமாவுக்கான நேரம் வந்துவிட்டது. மேலும், சில பெயர்கள் வெளிவரலாம், பார்ப்போம். இங்குள்ள முறைகள் மாற வேண்டும். அதற்கான வழிகாட்டுதல்கள் கண்டிப்பாக இடம் பெற வேண்டும். பாதுகாப்பான வேலை செய்யும் இடமாக உருவாக்க வேண்டும்,” என்று கூறியுள்ளார்.
சித்தார்த் எதிர்பார்ப்பது போல் மேலும் சில பெயர்கள் இந்த விவகாரத்தில் வெளிவருமா?, அல்லது அடங்கிப் போய்விடுமா ?.