ஆண்களுக்கும் 'பீரியட்ஸ்' ; சலசலப்பை கிளப்பிய ராஷ்மிகாவின் கருத்துக்கு பெருகும் ஆதரவு | ரூ.100 கோடி வசூலை குவித்த 'டியூட்' முதல் வரிசை கட்டும் இந்த வார ஓடிடி ரிலீஸ்....! | பிரதமர் மோடியின் அம்மா வேடத்தில் நடிக்கும் ரவீனா டாண்டன் | ஜேசன் சஞ்சய் எடுத்த சரியான முடிவு : விக்ராந்த் வெளியிட்ட தகவல் | உபேந்திரா-பிரியங்கா திரிவேதி மொபைல் போன்களை ஹேக் செய்த பீஹார் வாலிபர் கைது | லோகா படத்தின் புதிய பாகத்தில் மம்முட்டி : துல்கர் சல்மான் தகவல் | நாகார்ஜுனா மீதான அவதூறு கருத்துக்கு ஒரு வருடம் கழித்து வருத்தம் தெரிவித்த தெலுங்கானா அமைச்சர் | சின்மயியிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்த ஜானி மாஸ்டரின் மனைவி | 'ஜனநாயகன்' வாங்குவதில் வினியோகஸ்தர்கள் தயக்கம் ? | ராஜமவுலி, மகேஷ்பாபு பட தலைப்பு அறிவிப்பு விழா, பிரம்மாண்ட ஏற்பாடுகள் |

மாநகரம் உட்பட பல படங்களில் நடித்த நடிகர் சந்தீப் கிஷண் “பல ஆண்டுகளுக்குப் பிறகு மறுபடியும் 'புதுப்பேட்டை' படம் பார்த்தேன். ஒவ்வொரு முறையும் ஆச்சரியமாக இருக்கிறது” என டுவிட்டரில் தெரிவித்திருந்தார்.
அந்த டுவீட்டை ஷேர் செய்த செல்வராகவன் அவருக்கு நன்றியும் தெரிவித்தார். அந்த டுவீட்டுக்குக் கீழே, 'மாஸ்டர் பீஸ், 'புதுப்பேட்டை' இரண்டாம் பாகத்துக்காக நாங்கள் இன்னும் காத்திருக்கிறோம்' என ஒரு ரசிகர்கள் டுவீட் பண்ணியிருந்தார். அதற்கு, “நிச்சயம் நேரம் வரும் ப்ரோ. இது கண்டிப்பாக நடக்கும்” என பதிலளித்துள்ளார் செல்வராகவன்.
செல்வராகவன் இயக்கத்தில் 2006-ம் ஆண்டு ரிலீஸான 'புதுப்பேட்டை' படத்தில், தனுஷ் ஹீரோவாக நடிக்க, சினேகா, சோனியா அகர்வால் கதாநாயகிகளாக நடித்தனர். இந்தப்படம், வெளியாகி 12 ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில் அதன் இரண்டாம் பாகம் குறித்து அப்டேட் பண்ணியிருக்கிறார் செல்வராகவன்.