பிளாஷ்பேக்: தமிழில் சினிமாவான தெலுங்கு நாடகம் | ரஜினியின் அதிசய பிறவி பாணியில் தர்ஷன் நடிக்கும் படம் | முதலில் மறக்கப்பட்டதா ‛ஜனனி' பாடல் : பாடி முடித்து வைத்த இளையராஜா | கேரளாவில் 'காந்தாரா 2' வெளியீடு சிக்கல் சுமூகமாக தீர்ந்தது | தயாரிப்பு நிறுவனம் துவங்கிய 'மின்னல் முரளி' இயக்குனர் | லோகா படப்பிடிப்பின் போது வீட்டுக்கு செல்வதையே தவிர்த்தேன் ; சாண்டி | ஹிந்தியில் ஹீரோ கிடைக்காததால் மிராஜ் படத்தை மலையாளத்தில் இயக்கினேன் ; ஜீத்து ஜோசப் | தாராளமாக வெளியேறலாம் ; பிக்பாஸ் வைல்ட் கார்டு போட்டியாளர்களிடம் கோபம் காட்டிய மோகன்லால் | ‛வட சென்னை 2' வில் தனுஷ் : வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது | குல தெய்வம் கோயிலுக்கு போங்க : ரசிகர்களுக்கு தனுஷ் அட்வைஸ் |
கவிஞர் வைரமுத்து பாலியல் ரீதியாக என்னை அணுகினார், மிரட்டினார் என பாடகி சின்மயி கூறிய சம்பவம் திரையுலகத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. தொடர்ந்து வைரமுத்து மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை டுவிட்டரில் பதிவிட்டு வருகிறார். அதோடு காலையில் இதுதொடர்பாக நீண்டதொரு விளக்கத்தையும் பேஸ்புக்கில் நேரலையில் ரசிகர்களுக்கு தெரிவித்தார்.
இந்நிலையில் சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த சின்மயி கூறியதாவது : பப்ளிசிட்டிக்காக வைரமுத்து மீது குற்றம் சுமத்தவில்லை. அந்த சம்பவம் நடந்தது உண்மை. பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விவகாரத்திற்கு இப்போது ஆதாரம் கேட்பது முறையற்றது. அதற்கான ஆதாரங்கள் இல்லை.