ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழில் 'திமிரு', 'கொம்பன்', மற்றும் 'கெத்து' ஆகிய படங்களில் வில்லனாக மிரட்டியவர் ஐ.எம்.விஜயன்.. சில மலையாள படங்களிலும் நடித்துள்ளார். கேரளாவை சேர்ந்த இவர் ஒரு புட்பால் பிளேயரும் கூட.. “அர்ஜுனா விருது உட்பட பல விருதுகளை பெற்று புட்பால் போட்டிகளில் இந்தியாவுக்கு நல்ல மரியாதையை தேடித்தந்தவர் ஐ.எம்.விஜயன்
சில மாதங்களுக்கு முன்பு கால்பந்து வீரர் வி.பி.சத்யனின் சுயசரிதை கேப்டன் என்கிற பெயரில் ஜெயசூர்யா நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்றது. அந்தவகையில் தனது விளையாட்டு வாழ்க்கை வரலாறையும் படமாக தயாரிக்கும் எண்ணத்தில் 'பிக் டாடி' என்கிற தயாரிப்பு நிறுவனத்தை தனது நண்பர்களுடன் இணைந்து துவங்கியுள்ளார் ஐ.எம்.விஜயன்.
இந்தப்படத்தில் புட்பால் வீரராக நிவின்பாலி நடிக்க, 'ராம்லீலா' பட இயக்குனர் அருண்கோபி இந்தப்படத்தை இயக்கலாம் என சொல்லப்படுகிறது. சமீபத்தில் இயக்குனர் அருண்கோபி சில புட்பால் வீரர்களுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இதை ஓரளவு உறுதிப்படுத்துகிறது.