ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மணிரத்னம் இயக்கத்தில் கடந்த எட்டு வருடங்களில் தமிழ் சினிமாவில் வெளிவந்த 'ராவணன், கடல், ஓ காதல் கண்மணி, காற்று வெளியிடை' ஆகிய படங்களில் 'ஓ காதல் கண்மணி' படம் மட்டுமே வெற்றிப் படமாக அமைந்தது. மற்ற மூன்று படங்களுமே எதிர்பாராத தோல்வியைத் தழுவியது. சினிமாவில் அறிமுகமாகி 25 வருடங்களுக்கு மேலானலும் அந்தந்த காலகட்டங்களுக்கேற்ப இளைஞர்களின் ரசனையைப் புரிந்து கொண்டு அவர்களுக்கான படங்களைக் கொடுப்பதையே வழக்கமாக வைத்திருப்பவர் மணிரத்னம். ஆனாலும், அந்தத் தோல்விகள் அவருக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை. பெரும்பாலும் சொந்தப் படங்களையே அவர் தயாரிப்பதால் அவருக்கு பிரச்சினையில்லை.
தமிழில் முதல் முறையாக புதிய கூட்டணி முன்னணி நடிகர்கள் நடித்துள்ள 'செக்கச் சிவந்த வானம்' படத்திற்கான எதிர்பார்ப்பு இப்போது அதிகமாகியுள்ளது. இப்படத்திற்கான முன்பதிவு இன்று ஆரம்பமாகியுள்ளது. சிறப்புக் காட்சிகள் அதிகாலை 5 மணிக்கே நடைபெற உள்ளன. சிம்பு, விஜய் சேதுபதி படத்தில் இருப்பதால் படத்திற்கான முன்பதிவும் எதிர்பார்ப்பைவிட நன்றாகவே உள்ளதாக தியேட்டர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தன்னுடைய பழைய வெற்றியை மணிரத்னம் மீண்டும் இந்தப் படம் மூலம் பெறுவாரா என்பது இன்னும் சில தினங்களில் தெரிந்துவிடும்.