'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
இசையமைப்பாளர் இளையராஜா மீது பெங்களூருவைச் சேர்ந்த இந்திய கிறிஸ்துவ புதுப்பித்தல் என்ற அமைப்பு பெங்களூரு 8-வது மெட்ரோபாலிட்டன் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த அமைப்பின் தலைவர் கிரிகோரி அசோக் ஆரோக்கியசாமி தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:
இசை அமைப்பாளர் இளையராஜா, கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு டி.வி. நிகழ்ச்சியில் பேசும்போது கிறிஸ்தவர்களின் புனித நூலான வேதாகமத்தில் சொல்லப்பட்டுள்ள கருத்துக்களை கடுமையாக விமர்சனம் செய்தார். அதோடு கோடிக்கணக்காக கிறிஸ்தவர்கள் நம்பும் இயேசுவின் இரண்டாம் வருகை (உயிர்த்தெழுதல்) குறித்தும் விமர்சனம் செய்துள்ளார். இது கோடிக்கணக்கான கிறிஸ்தவர்கள் மனதை காயப்படுத்தி உள்ளது. அவர்களின் நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையில் அவரின் கருத்துக்கள் இருந்தது.
எனவே இளையராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிமன்றம். மனுமீதான விசாரணை அடுத்த மாதம் 9ந் தேதி நடக்கும் என்று அறிவித்தது.