இந்த 3 விஷயங்களும் முக்கியமானவை : தீபிகா படுகோனே | உருவக்கேலி விவகாரம் : கயாடு லோஹர் கொடுத்த விளக்கம் | அடி வாங்க தயாரா : குஷ்பு கோபம் | தனுஷின் தேரே இஷ்க் மெயின் டிரைலர் வெளியீடு : வரவேற்பு எப்படி | காந்தா படத்தின் முதல் நாள் வசூல் விவரம் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி படத்திலிருந்து சுந்தர் சி விலகல் ஏன் : கமல் சொன்ன பதில் | ஜப்பானில் வெளியாகும் மலைக்கோட்டை வாலிபன் : ரிலீஸ் தேதி அறிவிப்பு | தேசிய விருதுக்கு படம் அனுப்புவதில் ஏற்பட்ட சிக்கல் : நீதிமன்றத்தை நாடிய பஹத் பாசில் படக்குழு | மம்முட்டிக்கு பிரித்விராஜ் சிபாரிசு, விநாயகனுக்கு மம்முட்டி சிபாரிசு : களம்காவல் சுவாரசியம் | சித்தார்த், ராஷி கண்ணா இணையயும் 'ரெளடி அண்ட் கோ' |

இசையமைப்பாளர் இளையராஜா மீது பெங்களூருவைச் சேர்ந்த இந்திய கிறிஸ்துவ புதுப்பித்தல் என்ற அமைப்பு பெங்களூரு 8-வது மெட்ரோபாலிட்டன் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த அமைப்பின் தலைவர் கிரிகோரி அசோக் ஆரோக்கியசாமி தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:
இசை அமைப்பாளர் இளையராஜா, கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு டி.வி. நிகழ்ச்சியில் பேசும்போது கிறிஸ்தவர்களின் புனித நூலான வேதாகமத்தில் சொல்லப்பட்டுள்ள கருத்துக்களை கடுமையாக விமர்சனம் செய்தார். அதோடு கோடிக்கணக்காக கிறிஸ்தவர்கள் நம்பும் இயேசுவின் இரண்டாம் வருகை (உயிர்த்தெழுதல்) குறித்தும் விமர்சனம் செய்துள்ளார். இது கோடிக்கணக்கான கிறிஸ்தவர்கள் மனதை காயப்படுத்தி உள்ளது. அவர்களின் நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையில் அவரின் கருத்துக்கள் இருந்தது.
எனவே இளையராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிமன்றம். மனுமீதான விசாரணை அடுத்த மாதம் 9ந் தேதி நடக்கும் என்று அறிவித்தது.