ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இசையமைப்பாளர் இளையராஜா மீது பெங்களூருவைச் சேர்ந்த இந்திய கிறிஸ்துவ புதுப்பித்தல் என்ற அமைப்பு பெங்களூரு 8-வது மெட்ரோபாலிட்டன் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த அமைப்பின் தலைவர் கிரிகோரி அசோக் ஆரோக்கியசாமி தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:
இசை அமைப்பாளர் இளையராஜா, கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு டி.வி. நிகழ்ச்சியில் பேசும்போது கிறிஸ்தவர்களின் புனித நூலான வேதாகமத்தில் சொல்லப்பட்டுள்ள கருத்துக்களை கடுமையாக விமர்சனம் செய்தார். அதோடு கோடிக்கணக்காக கிறிஸ்தவர்கள் நம்பும் இயேசுவின் இரண்டாம் வருகை (உயிர்த்தெழுதல்) குறித்தும் விமர்சனம் செய்துள்ளார். இது கோடிக்கணக்கான கிறிஸ்தவர்கள் மனதை காயப்படுத்தி உள்ளது. அவர்களின் நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையில் அவரின் கருத்துக்கள் இருந்தது.
எனவே இளையராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிமன்றம். மனுமீதான விசாரணை அடுத்த மாதம் 9ந் தேதி நடக்கும் என்று அறிவித்தது.