சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
சமீபத்தில் வெளிவந்த மேற்கு தொடர்ச்சி மலை படம் மிகுந்த வரவேற்பை பெற்றது. இதனை விஜய் சேதுபதி தயாரித்திருந்தார், லெனின் பாரதி இயக்கி இருந்தார். தற்போது இதே பாணியில் மரகதகாடு என்ற படம் தயாராகி உள்ளது.
அஜய், ராஞ்சனா, ஜெயஸ்ரீ என்ற புதுமுகங்களுடன் மலைப் பகுதி மக்களே நடித்துள்ளனர். மங்களேஸ்வரன் இயக்கி உள்ளார். ஆர்.ஆர்.பிலிம்ஸ் சார்பில் ரகுநாதன் தயாரித்துள்ளார். ஜெய் பிரகாஷ் இசை அமைத்துள்ளார், நட்சத்திர பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். படம் பற்றி இயக்குனர் மங்களேஸ்வரன் கூறியதாவது:
காடுகளை அழித்து காட்டு மக்களை அங்கிருந்து விரட்டியடித்து காட்டை சுடுகாடாக்கும் கார்பரேட் நிறுவனங்களுக்கு எதிரான படம் இது. காட்டு மக்களை அவர்கள் விருப்பம்போல் அவர்கள் இடத்தில் வாழ அனுமதிக்க வேண்டும். என்பதை வலியுறுத்தும் படம். தற்போது காட்டு மக்கள் அனுபவித்து வரும் கொடுமைகளை ஒரு நிஜ சம்பவத்தின் பின்னணில் சொல்கிறோம். ஒரு சிலரைத் தவிர மற்ற கதை மாந்தர்கள் அனைவருமே காட்டு மக்களே. அடர்ந்த காடுகளில், காட்டு மக்களோடு தங்கி, அவர்கள் கொடுத்த உணவையே உண்டு வாழ்ந்து படமாக்கி இருக்கிறோம். கர்ணம் தப்பினால் மரணம் என்கிற அளவிற்கான பள்ளத்தாக்குகள், பாய்ந்தோடும் காட்டாறுகள் இவற்றில் உயிரை பணயம் வைத்து படமாக்கி உள்ளோம். என்றார்.