ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இந்தியத் சினிமாவின் முக்கியமான ஒளிப்பதிவாளர்களில் ஒருவர் சந்தோஷ் சிவன். தயாரிப்பாளர்களைக் கிண்டலடித்து இவர் பதிவிட்ட டுவீட் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
அதில், தயாரிப்பாளர்கள் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு சம்பளம் கொடுக்கும் போது கோபத்தைக் காட்டுவதாகவும், நாயகிகளுக்கு சம்பளம் கொடுக்கும் போது கொஞ்சலைக் காட்டுவதாகவும், ஒரு நாயின் புகைப்படத்தைப் போட்டு பதிவிட்டிருக்கிறார்.
இந்த டுவீட் தயாரிப்பாளர்களிடம் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே. பிலிம்ஸ், சதீஷ் குமார், சந்தோஷ் சிவனுக்கே போன் செய்து ஏன் இந்த மாதிரி பதிவிட்டீர்கள் என அவரிடமே கேட்டுவிட்டார். அதற்கு சந்தோஷ் சிவனும் தனது வருத்தத்தை பதிவு செய்துள்ளார்.
மேலும் டுவிட்டரில், கலையை நேசிக்க தெரியாத பணவெறி பிடித்த உன் திமிர் பிடித்த விமர்சனத்திற்கு கண்டனம். நீ யாரை சொல்கிறாய், உனக்கு வாய்ப்பு கொடுத்த விஷாலையா இல்லை லிங்குசாமியையா.? மன்னிப்பு கேள், இல்லையென்றால் உன்னை கலைத்தாய் உணரச்செய்யும் என பதிவிட்டிருந்தார்.
இதையடுத்து, டுவிட்டரில் அந்த பதிவை நீக்கிய சந்தோஷ் சிவன், "நான் பதிவிட்ட டுவீட் ஆங்கிலத்தில் பார்வேர்டாக வந்த செய்தி. பல தயாரிப்பாளர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் நான் நீக்கிவிட்டேன். அந்த பதிவு யாரையும் குறிப்பிடவில்லை என டுவீட் செய்திருக்கிறார்.