சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் பேட்ட படத்தின் படப்பிடிப்பு டார்ஜிலிங், டேராடூனில் நடந்து வந்த நிலையில், தற்போது உத்தரபிர தேசத்தில் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதற்காக சில தினங்களுக்கு முன்பு ரஜினி உத்தரபிரதேசம் விரைந்தார்.
ஆனால், அவர் அங்கு செல்லும் வழியில் டில்லியில் முகாமிட்டு ஒரு முக்கிய அரசியல் தலைவரை ரகசியமாக சந்தித்து விட்டு சென்றதாக சோசியல் மீடியாக்களில் பரபரப்பு செய்திகள் வெளியாகின. ஆனால் அந்த செய்தியை ரஜினிதரப்பினர் மறுத்துள்ளனர்.
அதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள செய்தியில், படப்பிடிப்புக்காக லக்னோ செல்வதற்காக டில்லி வழியாக சென்றார் ரஜினிகாந்த். மற்றபடி அவர் டில்லியில் முகாமிட்டு அரசியல் தலைவர்கள் யாரையும் சந்திக்கவில்லை. அந்த செய்தி முற்றிலும் வதந்தி என்று கூறப்பட்டுள்ளது.