ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கெளதம் மேனன் இயக்கியுள்ள எனை நோக்கி பாயும் தோட்டா, பாலாஜி மோகன் இயக்கத்தில் மாரி 2, வெற்றிமாறன் இயக்கும் வட சென்னை ஆகிய படங்களில் நடித்து வரும் தனுஷ், இன்னொரு பக்கம் தன்னுடைய ரசிகர் மன்றத்தை வலுப்படுத்தும் வேலையில் இறங்கியுள்ளார்.
இயக்குநர் சுப்பிரமணிய சிவாவை தன்னுடைய ரசிகர் மன்றத்தின் தலைவராக நியமித்த தனுஷ், அடுத்தகட்டமாக சமூக வலைத்தளங்களில் தனக்காகக் குழுக்களை உருவாக்கி வருகிறார். அதாவது தன்னைப் பற்றியும் தன்னுடைய படங்களைப் பற்றியும் சமூக வலைத்தளங்களில் செய்திகளை பரப்புவதற்காக இந்தக்குழுக்களை உருவாக்கி வருகிறார்.
அதில் தன்னுடைய ரசிகர்களை உறுப்பினர்களாக நியமித்திருக்கிறார். இவர்களுக்கு மாத சம்பளம் கொடுக்கப்படுகிறது. சமூகவலைத்தளத்தில் இயங்கும் ரசிகர்களை நேரில் சந்திக்கவும் இருக்கிறார் தனுஷ்.
ரசிகர்களை தனுஷ் சந்திக்க இருப்பது குறித்தத் தகவலைத் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் நிர்வாக தயாரிப்பாளரான வினோத், தெரிவித்துள்ளார். அக்டோபர் மாதம் இந்தச் சந்திப்பு நடைபெறும் என அறிவித்துள்ள வினோத், விரைவில் சரியான தேதி மற்றும் இடத்தை அறிவிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.