ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பஞ்சாபி நடிகை சோனம் பாஜ்வா. 4 ஆண்டுகளுக்கு முன்பு கப்பல் என்ற தமிழ் படத்தில் நடித்தார். இப்போது மீண்டும் காட்டேரி என்ற படத்தின் மூலம் தமிழுக்கு வந்திருக்கிறார். 4 வருட இடைவெளிக்கான காரணம் குறித்து சோனம் பாஜ்வா கூறியதாவது :
கப்பல் படம் நடித்து முடித்த உடனேயே இரண்டு மூன்று படங்கள் வாய்ப்பு வந்தது. அப்போது நான் பஞ்சாபி படங்களில் பிசியாக இருந்தால் நடிக்க முடியவில்லை. அவர்களும் எனக்காக காத்திருக்க விரும்பவில்லை. அதன் பிறகு ஒன்றிரண்டு பேர் போனிலேயே எனக்கு கதை சொன்னார்கள். அந்த கதைகள் எனக்குப் பிடிக்கவில்லை. சென்னையில் எனக்கு நண்பர்கள் யாரும் இல்லை. அதனால் தொடர்பு விட்டுபோய்விட்டது.
காட்டேரி படத்தில் நான் தான் நடிக்க வேண்டும் என்று இயக்குனர் டீகே பேசினார். ஆரம்பத்தில் பேய் படத்தில் நடிக்க விருப்பம் இல்லை என்று கூறிவிட்டேன். என்றாலும் கதையை கேட்டுவிட்டு உங்கள் முடிவை சொல்லுங்கள் என்று சொன்னார். கதை கேட்டேன் பிடித்திருந்தது உடனே ஒப்புக் கொண்டேன். தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்கும் ஆர்வம் இருக்கிறது. அதற்காக யாரிடமும் சென்று வாய்ப்பு கேட்க மாட்டேன். நல்ல கதைகள் தேடி வந்தால் நடிப்பேன். என்றார் சோனம் பாஜ்வா